Sunday, February 28, 2021

செவ்வாயில் இன்சைட்

  ஆபத்தான ஏழு நிமிட பாய்ச்சலுக்கு பின் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் புதிய ஆய்வு இயந்திரமான இன்சைட் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியுள்ளது. இந்த இன்சைட் விண்கலம் செவ்வாயின் நிலத்துக்கு கீழ் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளது. பூமிக்கு அப்பால் மனிதன் இவ்வாறான ஆய்வு ஒன்றை மேற்கொள்வது இது முதல் முறையாகும். இன்சைட் ஆய்வு இயந்திரம் இலங்கை நேரப்படி 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் செவ்வாயை தொட்டது என உறுதி செய்யப்பட்டது. குறிப்பாக அது வெற்றிகரமாக தரையிறங்கிய சமிக்கை 2 நிமிடங்கள் கழித்தே பூமியை வந்தடைந்தது.

இன்சைட் விண்கலம் தற்போது செவ்வாய் கிரகத்தின் நிலைக்கோட்டுக்கு அருகில் எலிசியம் ப்லாசினியா என அழைக்கப்படும் பரந்த தட்டையான பகுதியில் நிலைகொண்டுள்ளது. இந்த இடத்தை செவ்வாயின் மிகப்பெரிய தரிப்பிடம் என்று நாசா வர்ணித்துள்ளது.

செவ்வாயில் இன்சைட்

இன்சைட் தரையிறங்கிய விரைவில் அந்த நிலப்பரப்பின் முதல் படத்தை பூமிக்கு அனுப்பியது. இந்த ஆய்வு இயந்திரத்தை சூழ அழுக்கான மந்தமான நிலையில் இருப்பதை காண முடிகின்றது. விண்கலத்தின் கீழ் பக்கம் உள்ள கமரா ஒன்றின் ஊடாக இந்த படம் பிடிக்கப்பட்டுள்ளது. படத்தில் தூசி மேலெழுந்திருப்பதை காண முடிந்த போதும் சிறுசிறு பாறைகள் இருப்பது தெரிகிறது.

செவ்வாயில் இன்சைட்

செவ்வாய் வளிமண்டலத்தில் மணிக்கு 19800 கிலோமீட்டர் வேகத்தில் நுழைந்த விண்கலம் தந்து வெப்பத்தில் இருந்து பாதுகாக்கும் கேடயம் பரசூட் மற்றும் ரொக்கெட் உதவியுடன் மெதுவாக தரையிறங்கியது. அதிகப்படியான புழுதியால் விண்கலத்தில் உள்ள லென்ஸ் மறைக்கப்பட்டதால் தரையிறங்குவதில் பெரும் சவால் ஏற்பட்டதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தரையிறங்கிய வரையில் அதன் சூரிய சக்தி கருவியை நிறுவுவது முதல் சவாலாக இருந்தது. செவ்வாயின் பூச்சிய வெப்பநிலைக்கு மத்தியில் இன்சைட் தனது இயக்கத்தை ஆரம்பிக்க சக்தியை பெறவேண்டி உள்ளது. இன்சைட் பின்தொடர்ந்து செவ்வாய் கிரகத்துக்கு இரண்டு சிறிய செயற்கை கோள்கள் சென்றுள்ளன. இவை அங்கு இன்சைட் எடுக்கும் புகைப்படங்களை பூமிக்கு அனுப்ப உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

Saturday, February 27, 2021

காற்றின் தின்னல் செயற்பாடுகள்

 புவி மேற்பரப்பிலே நடைபெறுகின்ற தின்னல் காரணிகளில் ஒரு பிரதான தின்னல் காரணியாக காற்று விளங்குகின்றது. இந்த காற்றினுடைய செயற்பாடுகள் பூகோள மேற்பரப்பில் பாலைவன பிராந்தியங்களில் அதிகம் இடம்பெறுவதனை அவதானிக்க முடிகின்றது. இவ்வாறு பாலைவன பிராந்தியங்களில் காற்றினுடைய வேகம் அபரிவிதமாவதற்கு  வெப்பம், அமுக்கம், புவி மேற்பரப்பில் காணப்படுகின்ற தாவரப்போர்வைகளின் அளவு குறைவடைதல்  போன்றன  பிரதான காரணிகளாக திகழ்கின்றது.  

பூகோள பரப்பில் காற்றானது வீசுகின்றபோது அக்காற்றினால் ஏற்படுத்தப்படுகின்ற பிரதான தின்னல் செயற்பாடுகளாக தேய்தல், வாரி இறக்கல், அரைந்து தேய்தல் போன்றன காணப்படுகின்றன. 

காற்றின் தின்னல் செயற்பாடுகள்

பாலைவன பிராந்தியங்களில் காற்று வேகமாக வீசுகின்றபோது அதனது போக்குக்கு குறுக்கே பாறைப்படைத்தளங்கள் எதிர்ப்படும் வேளையில் அக்காற்றானது மிருதுவான சுரண்டல் செயன்முறைகளை ஏற்படுத்தி அப்பாறைகளில் உள்ள மிக நுண்ணிய பருப்பொருட்களை தன்வசம் எடுத்து செல்கின்றபோது அதனை தேய்தல் செயன்முறை என்று அழைத்துக்கொள்ளுவார்கள்.

பாலைவன பிராந்தியங்களில் காற்றினுடைய தொழிற்பாட்டினால் அங்குள்ள மணல் பரப்புக்கள் தளர்வுற்று காணப்படும் வேளை காற்றானது வேகமாக வீசும்போது காற்றினால் தளர்வுற்று காணப்படுகின்ற மணல்பரப்புகள் காற்றின் வீசல் செயற்பாட்டின் பிரகாரம் அம் மட்பரப்புகள் காற்றினால் வாரி இறக்கப்படும் வேளையில் அதனை வாரி இறக்கல் செயன்முறை என அழைப்பார்கள்.

காற்றின் தின்னல் செயற்பாடுகள்

காற்றினால் தேய்தல், வாரி இறக்கல் உள்ளிட்ட பல்வேறுபட்ட செயன்முறைகளின் போது கொண்டுவரப்பட்ட பருப்பொருட்களில் காற்றானது தன்னோடும் தனது தளத்தோடும் அரைந்து தேய்த்து கொண்டு செல்லும். இவ்வாறாக செல்கின்ற தன்மையை அரைந்து தேய்தல் செயன்முறை என அழைப்பார்கள்.


Friday, February 26, 2021

கொங்கோ மழைக்காடுகள்

 உலகின் இரண்டாவது மிகப்பெரிய அயனமழைக்காடாக விளங்குவது கொங்கோ மழைக்காடாகும். இது 3.7 மில்லியன் சதுரகிலோமீட்டர் பரப்பளவினை கொண்டுள்ளது. இது கிட்டத்தட்ட மெக்சிக்கோ நாட்டினுடைய பரப்பளவும் சமனாக காணப்படுகின்றது. இது கொங்கோ நதியினை அண்மித்தும் அதனை சூழ்ந்தும் காணப்படுகின்றது. இந்த கொங்கோ காட்டினை சூழ்ந்து கஜானா, கமரூன், கொங்கோ குடியரசு, மத்திய ஆபிரிக்க குடியரசு, ஆகிய நாடுகள் காணப்படுகின்றது.

கொங்கோ காடுகள்

கொங்கோ காடானது மலைக் கொரில்லா  குரங்குகளின் வீடாக காணப்படுகின்றது. இது தவிர காட்டு  யானைகள், 1000 வகையான பறவையினங்கள், 75 மில்லியன்  மக்கள், மற்றும் 150 வகையான காட்டு வாசி இனங்கள் வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

இந்த கொங்கோ மழைக்காடானது 1.6 மில்லியன் வருடங்கள் முதல் 10000 வருடங்கள் பழமை வாய்ந்த காடாக காணப்படுகின்றது. கொங்கோ அயனமழை காடுகளினை கொங்கோலியன் மழைக்காடுகள் எனவும் எல்லோராலும் அழைக்கப்படுகின்றது. இந்த காடுகள் 2000 ஆம் ஆண்டு முதல் 0.3% இனால் அருகிக்கொண்டு செல்வதாக கூறப்படுகின்றது. 


இந்த காட்டில் 10000 வகையான தாவரங்கள் வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.  இதுதவிர 400 வகையான முலையூட்டிகள் , 700 வகையான  மீனினங்கள் போன்றன காணப்படுகின்றன. இங்கு வாழும் 75 மில்லியன் மக்கள் இந்த காட்டினை ஆதாரமாக கொண்டு தான் வாழ்கின்றார்கள். உலக காடுகளில் 18% ஆன காடுகள் கொங்கோ மழைக்காடுகளாக இருக்கிறது.

கொங்கோ காடுகள்

இந்த கொங்கோ மழைக்காடுகளின் காலநிலையினை அவதானிக்கின்றபோது இது அயன காலநிலைக்கு உட்பட்டு காணப்படுகின்றது. இங்கு குளிர் நிலவும் அதே சந்தர்ப்பத்தில் வெப்பமும் நிலவும் தன்மை கொண்டது. இங்கு 365 நாட்களில் 117 நாட்கள் மழை பொழியும் தன்மை கொண்டதாக இருக்கிறது. இங்கு ஆண்டு மழைவீழ்ச்சி 1866 மில்லிமீட்டர் ஆகும். வெப்பநிலையினை பொறுத்தவரை 20 தொடக்கம் 27 பாகை செல்ஸியஸ் ஆக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இங்கு கிட்டத்தட்ட 30% மான ஒட்சிசன் வாயு தயாரிக்கப்படுகின்றமை விசேடமாக காணப்படுகின்றது.


Thursday, February 25, 2021

உலகப்படத்தினை வரைந்தவர் யார்

 நாம் இன்று வாழ்கின்ற உலகத்தினை தட்டையான தாளில் வரைந்த பெருமை தொலமி என்பவரினையே சாரும். இவர் தொலெமி, மற்றும் தாலமி என்ற பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றார் இவர் கி.பி 90ம் ஆண்டளவில்  பிறந்தார். இவரின் பிறப்பிடம் எகிப்து ஆகும். இவர் ஒரு சிறந்த  புவியியலாளரும்,வானியலாளரும், சோதிடரும் ஆவார். இவர் கிரேக்க மொழியினை நன்கு கற்று தேர்ந்தவர் ஆவார். இவரின் உலகப்படம் கி.பி 2ம் நூற்றாண்டில் கிரேக்கர்களினால் அறியப்பட்ட ஒன்றாகும். இவருடைய படங்கள் அகல கோடுகள் மற்றும் நெடுங்கோடுகள் ஆகியவற்றினை பயன்படுத்தி வரையப்பட்டு இருக்கிறது. முதன்முதலாக அகல, நெடுங்கோடுகளை பயன்படுத்தி உலகப்படத்தினை வரைந்த பெருமை தொலமியினை சாரும்.

தொலமி

இவரின் நிலப்படத்தில் இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலப்படம் நான்கு புறமும் நிலத்தால் சூழப்பட்ட இரண்டு கடல்களாக தான் காணப்படுகின்றது. அதில் ஒன்று நடுக்கடல் மற்றயது இந்திய பெருங்கடல் ஆகும். இந்திய பெருங்கடலினை பொறுத்தவரை கிழக்கே தென்சீன கடல் வரை பரந்து காணப்படுகின்றது.

இந்த உலக படத்தில் ஐரோப்பா, மையக்கிழக்கு, இந்தியா, இலங்கை, மாலைதீவு சீனா ஆகிய இடங்கள் குறிக்கப்பட்டுள்ளன. இந்த படத்தினை அடிப்படையாக கொண்டு 2ம் நூற்றாண்டில் வணிக நடவடிக்கைகள் யாவும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக தான் இந்தியாவினை வணிகர்கள் அடையாளம்  செய்தனர்.

தொலமி

தொலமியின் உலகப்படத்தில் இலங்கையினை தப்ரபேன் என அழைக்கப்பட்டது. தொலமியின் நூலில் ஆசியா கண்டத்தின் தெற்கு பகுதியில் ஒரு தீவு இருப்பதாகவும் அது தப்ரபேன் எனவும் அழைக்கப்பட்டது. இருந்தபோதும் தொலமியின் காலத்தில் இலங்கை கண்டுபிடிக்கப்பட்டதா? என்ற சந்தேகம் ஆரம்பத்தில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவரின் உலகப்படத்தில் தப்ரபேன் இனை காண்பது சிக்கலாக இருந்தது. ஏனெனில் தப்ரபேனின் அளவு மிக பெரியதாக காட்டப்படுள்ளது. அதேவேளை இந்தியா அதன்  விட சிறியதாக காட்டப்பட்டது. இதனை பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானி தக்கன பிரதேசத்தினை தப்ரபேனுடன் இணைத்து காட்டியதால் தான் அது பெரிதாக தெரிந்தது என சுட்டிக்காட்டியுள்ளார். இதன் காரணமாக இந்த ஐயம் ஓரளவு தெளிந்தது. 

இன்று நங்கள் வாழ்கின்ற பூமி பல கண்டங்களாக பிரிந்துள்ளது. ஆயினும் கூட பிற்பட்ட கால அறிஞர்கள் தொலமியின் படத்தினை ஆதாரமாக கொண்டு தான் அது கண்டங்களாக பிரிந்ததை எடுத்து விளக்கியுள்ளார்கள். தொலமியின் ஆரம்ப படமே இன்றைய உலக படத்திற்கு ஒரு அச்சாணி ஆகும் என்பது உண்மைக்குரிய விடயமாகும். 

Wednesday, February 24, 2021

உலகின் கண்டங்கள்

 புவியினை பொறுத்தவரை பெரும்பகுதி நீரினாலும் ஏனைய பகுதி நிலத்தினாலும் சூழப்பட்டுள்ளது. நிலத்தினால் சூழப்பட்ட பகுதி கண்டங்களாக வியாபித்துள்ளது. உலகின் கண்டங்கள் 7 ஆக காணப்படுகின்றது. அவையாவன ஆசியா, ஆபிரிக்கா, ஐரோப்பா, அவுஸ்ரேலியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அந்தாட்டிக்கா போன்றனவாகும். இந்த 7 கண்டங்களிலும் சுமார் 270 நாடுகள் பரப்பி காணப்படுகின்றது.

ஆசியா கண்டத்தினை எடுத்துக்கொண்டால் இது உலகின் பெரியதாகவும் அதிக சனத்தொகை கொண்ட கண்டமாகவும் காணப்படுகின்றது. இது பூமியின் வடக்கு மற்றும் கிழக்கு அரைக்கோளத்தில் அமைந்துள்ளது. இது உலக நிலப்பரப்பில் 30% இனை கொண்டுள்ளது. இதன் கிழக்கில் பசுபிக் கடலும், தெற்கில் இந்திய பெருங்கடலும், எல்லைகளாக காணப்படுகின்றது. ஆசியா கண்டத்தில் சுமார் 69 நாடுகள் காணப்படுகின்றன.

உலகின் கண்டங்கள்

ஆபிரிக்கா கண்டம் உலகின் இரண்டாவது பெரிய கண்டமாகவும் அதிக சனத்தொகை கொண்ட கண்டமாகவும் காணப்படுகின்றது. உலகின் இருண்ட கண்டம் என ஆபிரிக்கா வர்ணிக்கப்படுகின்றது. இக்கண்டம் வடக்கு மத்தியதரை கடலினால் சூழப்பட்டது. உலக நிலப்பரப்பில் இது 20. 4% இனை கொண்டுள்ளது. ஆபிரிக்கா கண்டத்தில் சுமார் 44 நாடுகள் காணப்படுகின்றது.

அவுஸ்ரேலியா கண்டம் உலகின் மிக சிறிய கண்டம் என அழைக்கப்படுகின்றது. அத்துடன் குறைவான சனத்தொகை கொண்ட கண்டமாகவும் காணப்படுகின்றது. இது முற்றிலும் கடலினால் சூழப்பட்ட கண்டமாகும்.  இங்கு வாழ்கின்ற மக்களில் 82% ஆன மக்கள் கரையோர பகுதிகளில் வாழ்கின்றனர்.

உலகின் இரண்டாவது சிறிய கண்டமாக ஐரோப்பா கண்டம் காணப்படுகின்றது. உலக நிலப்பரப்பில் 6.8% ஆன பரப்பினை இக்கண்டம் கொண்டுள்ளது. ஐரோப்பா கண்டமானது 10180000 சதுரகிலோமீட்டர் பரப்பினை கொண்டுள்ளது. இந்து 53 நாடுகள் காணப்படுகின்றது.

வட அமெரிக்க கண்டமானது உலகின் மூன்றாவது பெரிய கண்டமாகும். இது பூமியில் 16.5% பரப்பினை கொண்டுள்ளது. இதன் பரப்பளவு 24230000 சதுரகிலோமீட்டர்கள் ஆகும். வட அமெரிக்க கண்டத்தில் 43 நாடுகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

உலகின் கண்டங்கள்

தென் அமெரிக்க கண்டத்தினை அவதானிக்கின்றபோது நான்காவது பெரிய கண்டமாக காணப்படுகின்றது. மேற்கில் பசுபிக் கடலும், தெற்கில் அந்தாட்டிக்கா பனிப்பாறைகளும், கிழக்கில் அத்திலாந்திக் கடலும் காணப்படுகின்றது. இங்கு முழுமையாக 14 நாடுகள் காணப்படுகின்றது.

அந்தாட்டிக்கா கண்டமானது தென் முனையில் காணப்படுகின்றது. இதன் பரப்பளவு 14.5 மில்லியன் சதுரகிலோமீட்டர் ஆகும். இங்கு 68% நீர் நிலைகள் காணப்படுகின்றது. அந்தாட்டிக்கா கண்டத்தில் சுமார் நான்கு நாடுகள் காணப்படுகின்றது. 

Tuesday, February 23, 2021

தேசப்படத்தில் பயன்படுத்தப்படும் நிறங்கள்

 தேசப்படமானது பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றது.  குறிப்பாக குடியேற்றங்களை அமைத்தல்,  உல்லாச பயண விருத்திகள், கல்வி சார் செயற்பாடுகள், பிரதேச அபிவிருத்தி, நீர்ப்பாசனம், போக்குவரத்து நடவடிக்கைகள் போன்றவற்றுக்காக பயன்படுத்தப்படுகின்றது. இதன் காரணமாக இந்த தேசப்படத்தில் நிறங்களும் குறியீடுகளும் பிரதானமாக காணப்படுகின்றன.

தேசப்படம்

குறியீடுகளையும் நிறங்களையும் பயன்படுத்தி தான் படங்களை வரைய முடியும். குறியீடுகள் பொதுவாக பௌதீக மற்றும் பண்பாட்டு அம்சங்களுக்கு பயன்படும். பௌதீக அம்சங்களை பொறுத்தவரை சமஉயர கோடுகள், இடைச்சம உயரகோடுகள், சம ஆழ கோடுகள், போன்றவற்றினை வரைவதற்கு பயன்படுகின்றது. சம உயர கோடுகளினை வரையும் போது கபிலநிறம் அல்லது மண்ணிறத்தில் வரைய வேண்டும். இடை சம உயரக்கோடுகளினை ---- என்ற குறியீட்டினை பயன்படுத்தி வரைந்து கொள்ள முடியும். சம ஆழ கோடுகள் நீல நிறத்தினால் வரையப்படும்.

இதுதவிர கடல் மற்றும் நதிகளினை அடையாளப்படுத்தும் போது நீல நிறுத்தினால் காட்டி கொள்ளலாம். மற்றும் கடற்கரை நீங்கு மணல்தடை மண்ணிறத்தினால் குறித்து காட்டப்படும். மலைத்தொடர்கள், கூம்புக்குன்றுகள், சுவடுகள், பள்ளத்தாக்குகள், கணவாய்கள் போன்றவற்றினை சம உயரகோடுகள் போல் வரைய வேண்டும். இதற்கும் கபில நிறம் அல்லது மண்ணிறத்தினை பயன்படுத்த வேண்டும்.

தேசப்படம்

பண்பாட்டு அம்சங்களை அவதானிக்கின்ற போது பௌதீக அம்சங்களுக்கும் பண்பாட்டு அம்சங்களுக்கும் மிக நெருங்கிய தொடர்புகள் உண்டு. பண்பாட்டு அம்சங்களாக அதிவேக பெருந்தெருக்கள், நீர்ப்பாசன கால்வாய்கள், பிரதான வீதிகள், புகையிரத வீதிகள், புகையிரத நிலையங்கள், எல்லைகள் , பாடசாலைகள், கோவில்கள், நீதிமன்றம், பொலிஸ் நிலையம், கட்டிடங்கள், குடியிருப்புக்கள், விவசாய நிலங்கள், பிற கட்டிடங்கள் போன்றன காணப்படுகின்றன. 


Monday, February 22, 2021

உலகின் மிகப்பெரிய எரிமலை - மவுனாலோவா

 உலகின் மிக பெரிய எரிமலையாக மவுனாலோவா காணப்படுகின்றது. இது அமெரிக்காவின் கவாய் தீவில் அமைந்துள்ளது. கவாய் தீவு என்பது முற்றுமுழுதாக எரிமலை வலயத்தினை கொண்டுள்ள தீவாகும். அதில் தான் இந்த மவுனாலோவா எரிமலையும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இதன் பரப்பு 750000 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். 

மவுனாலோவா எரிமலையின் உயரம் 4169 மீட்டர்கள் ஆகும். இதன் பாறை அமைப்பு கிட்டத்தட்ட 700000 தொடக்கம் 1 மில்லியன் ஆண்டுகள் பமையானதாக காணப்படுகின்றது.  இந்த எரிமலை 1843ம் ஆண்டு முதன் முதலாக வெடிப்பினை மேற்கொண்டது. இறுதியாக 1984ம் ஆண்டு தனது கக்குகையினை மேற்கொண்டது. இதுவரை 33 தடவைகள் கக்குகையினை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

மவுனாலோவா

இந்த மவுனாலோவா எரிமலை 400000 ஆண்டுகளுக்கு முன்னர் கடல் மட்டத்திலிருந்து தோன்றியதாக கூறப்படுகின்றது. 1843இல் தனது கக்குகையினை மேற்கொண்ட இவ் எரிமலை  77பேரினை காவுகொண்டதாக கூறப்படுகின்றது. இது ஒரு உயிர்த்த எரிமலையாக காணப்படுகின்றது. இதன் நீளம் 120 கிலோமீட்டர்கள் ஆகவும் அகலம் 103 கிலோமீட்டர்கள் ஆகவும் காணப்படுகின்றது. 

மவுனாலோவா எரிமலை கவாய் தீவின் 85% பரப்பினை கொண்டு வியாபித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த எரிமலை கக்குகையின் காரணமாக   8 கிலோமீட்டர் கடல் தரை பரவல் செயற்பாடு நடைபெற்றது. மவுனாலோவா எரிமலை இறுதியாக 1984ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ம் திகதி கக்குகையினை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

                       

மவுனாலோவா


இந்த எரிமலையினை சுற்றி பனிப்படலங்கள் நிறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு கவாய் தீவில் இந்த எரிமலை தவிர 7 எரிமலைகள் சங்கிலி வடிவ அமைப்பில் காணப்படுகின்றது. இந்த பகுதியினை பொறுத்தவரை புவிநடுக்ககங்கள் மிக மிக குறைவாகவே நடைபெறும் என்பது சுட்டிக்காட்டப்படுள்ளது.

மவுனாலோவா எரிமலை கடல் குன்று அமைப்பினை போல காணப்படும். ஏனெனில் இவை சங்கிலி அமைப்பில் இருப்பதால் கடல் குன்றுகள் போல காட்சியளிக்கும். இந்த எரிமலை தொடர்பாக விஞ்ஞானிகள் இன்றுவரை தமது ஆராய்ச்சியினை மேற்கொள்கிறார்கள்.



Sunday, February 21, 2021

இலங்கையின் தாமரைக்கோபுரம்

 இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள தாமரை கோபுரமானது கொழும்பு வியாஜரத்ன மாவத்தைக்கும் பெரா வாவிக்கும் அருகாமையில் காணப்படுகின்றது. இது பெரா வாவியில் இருந்து மேற்காக 740 மீட்டரிலும் , ரத்னம் வைத்தியசாலையில் இருந்து தென்மேற்காக 730 மீட்டரிலும் , கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து வட மேற்காக 1250 மீட்டரிலும் அமைந்துள்ளது. இதன் உயரத்தில் இருந்து பார்க்கும் ஒருவருக்கு கொழும்பு மாவட்டம் முழுவதும் தெரியும். இதன் கட்டுமான பணிகள் கடந்த 2012ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்து வைத்தார். 

இந்த தாமரை கோபுரம் சீனாவின் நிதியுதவியுடன் 104 மில்லியன் அமெரிக்க டொலர்இல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது 356.3 மீட்டர் உயரத்தினை கொண்டுள்ளதோடு தெற்காசியாவில் மிக உயரமான கோபுரமாகவும் விளங்குகின்றது. உலகின் அதிசயத்தில் ஒன்றான பிரான்ஸ் இன் ஈபிள் கோபுரம் 324 மீட்டரினை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஷாங்காய் கோபுரம், பெர்க்கி கோபுரம் , பெர்லின் கோபுரம் போன்றவற்றுக்கு அடுத்தாற்போல இலங்கையின் தாமரைக்கோபுரம்  காணப்படுகின்றது.

இலங்கையின் தாமரைக்கோபுரம்

இந்த தாமரை கோபுரம் கொழும்பு மாநகரத்துக்கு அழகு சேர்க்கும் முகமாக காணப்படுகின்றது. இந்த கோபுரத்தில் 13 மாடிகள் காணப்படுகின்றது. இதில் 6 மாடிகள் அடித்தளத்தில் காணப்படுகின்றது. இதன் உச்சிக்கு செல்ல மின்சார இயக்கிகள் உபயோகிக்கப்படுள்ளது. இங்கு 215 மீட்டர் வரை மின்னியக்கியில் செல்ல 2 நிமிடங்கள் மாத்திரமே தேவைப்படும். 

இதன் முதலாவது மாடியில் வர்த்தக கடைத்தொகுதியும் , உணவுகடைத்தொகுதியும் காணப்படுகின்றது. 3 மற்றும் 4 வது மாடியில் விடுதியும், விருந்தினர் பகுதியும் காணப்படுகின்றது. இதுதவிர இக்கோபுரத்தில் 400 பேர் அமரக்கூடிய மண்டபம், திருமண மண்டபம், ஆடம்பர விடுதிகள், பார்வையாளர் மண்டபம் ஆகியனவே காணப்படுகின்றது.

இலங்கையின் தாமரைக்கோபுரம்

இக்கோபுரத்தின் அடித்தள பகுதியில் தொடர்பாடல் பகுதி, அருங்காட்சியகம், உணவு விடுதிகள் , பூங்காக்கள், 50 ரேடியோ நிலையங்கள், 50 தொலைக்காட்சி நிலையங்கள், 20 தொலைத்தொடர்பு நிலையங்கள் ஆகியன காணப்படுகின்றது. இவை அனைத்தும் 219.8 மீட்டர் இல் அமைந்து காணப்படுகின்றது. அத்துடன் 1500 வாகனங்களினை ஒரே நேரத்தில் நிறுத்தி வைக்கக்கூடிய வாகன தரிப்பிடம் காணப்படுகின்றது.

இந்த கோபுரம் இந்துசமுத்திர பரப்பில் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் இடமாக காணப்படுகின்றது. இலங்கையின் இந்த தாமரைக்கோபுரம் சுற்றுலா பயணிகள் பார்வையிடும் ஒரு இடமாகவும், தொழில்நுட்பத்தின் விருத்தி மையமாகவும்  தற்பொழுது மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Friday, February 19, 2021

உலகப்படத்தில் பயன்படுத்தப்படும் நிறங்கள்

 உலகப்படத்தினை பொறுத்தவரை புவியியல் மாணவர்களுக்கு முக்கியம் பெற்ற ஒரு விடயமாக காணப்படுகின்றது. இதில எந்த ஒரு பௌதீக மற்றும் பண்பாட்டு அம்சங்களை உலகப்படத்தில் குறித்து காட்டுவதற்கு உரிய நிறங்கள் மிகவும் அவசியமானதாகும். படங்களில் மிகவும்  நிறங்கள் ஐந்து காணப்படுகின்றது. அவையாவன மண்ணிறம், சிவப்பு, நீலம், கறுப்பு, பச்சை போன்றனவாகும். 

மலைகளினை குறித்து காட்டுவதற்கு மண்ணிறம் பயன்படுகின்றது. குறித்த பின்பு மலையின் போக்குக்கு அமைவாக அதன் பெயரையும் வேண்டும். சமவெளிகள் நிறத்தினால் அடையாளப்படுத்தப்படும். மேட்டுநிலங்கள் யாவும் மஞ்சள் நிறத்தினால் அடையாளப்படுத்தப்படும். 

நீர்நிலைகளினை எடுத்துக்கொண்டால் அவை நீல நிறத்தினால் அடையாளமிட்டு காட்டப்படும். குறிப்பாக சமுத்திரங்கள், கடல்கள்,  ஆறுகள்,நீர்வீழ்ச்சிகள் போன்றன நீல நிறத்தினால் குறித்து காட்டப்படும். இதுதவிர புல்நிலங்கள் பச்சை நிறத்தினால் குறித்து காட்டப்படும். 

உலகப்படத்தில் பயன்படுத்தப்படும் நிறங்கள்

பாலைவனங்களை எடுத்துக்கொண்டால் அவை மண்ணிறத்தாலும், மற்றும் தேசிய பூங்காக்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் போன்றனவும் மண்ணிறத்தினால் அடையாளமிடப்படும். நீரிணையினை எடுத்துக்கொண்டால் ------ என்ற குறியீட்டு விளக்கம் மூலம் நீல நிறத்தினால் அடையாளமிடப்படும்.

நகரங்கள், வீதிகள், புகையிரத வீதிகள் ஆகியன சிவப்பு மற்றும் கறுப்பு நிறத்தினால் அடையாளமிடப்படும். நகரங்கள் சிவப்பு புள்ளி மூலம் குறித்து கட்டப்படும். வீதிகள் ----- மூலம் அடையாளமிடப்படும். நாடுகளினை அடையாளப்படுத்தி கொள்ள சிவப்பு நிறம் பயன்படுத்தப்படுகின்றது.

உலகப்படத்தில் பயன்படுத்தப்படும் நிறங்கள்

இதுதவிர ஏரிகள், ஓடைகள், நீர்த்தேக்கங்கள் ஆகியன நீல நிறத்தினாலும், காடுகள் பச்சை நிறத்தினாலும் அடையாளமிடப்படும். கடல்கள், சமுத்திரங்கள் நீல நிறத்தினால் குறிக்கப்படும் அதேவேளை அவற்றின் மத்தியில் பெயர்கள் குறிப்பிடப்பட வேண்டும். 

Thursday, February 18, 2021

படங்கள் பற்றிய அறிமுகம்

 புவியியல் சார் விடயங்களை தட்டையான ஒரு தாளில் வரைகின்ற ஒரு முறையாக படங்கள் காணப்டுகின்றன. இது சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு வரவிலக்கணமாக காணப்படுகின்றது. புவியியல் தரவுகளையும், தகவல்களையும் பயன்படுத்தும் ஒரு முறை படங்கள் என அழைக்கப்படுகின்றது. எனவே படங்களை பயன்படுத்துதல், அதனை வாசித்தல் என்பன முக்கியமாக தெரிந்து இருக்க வேண்டும்.

பண்டைய களங்களில் படங்கள் பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. மொசப்பத்தேமியார் தாம் வாழ்ந்த இடத்தினை அடையாளப்படுத்த களிமண் தட்டில் தங்களது இடத்தினை அடையாளப்படுத்தினார்கள். இதுவரை கண்டுபிடிக்கப்ட்ட படங்களில் மிக பழமையான படமாக அது காணப்படுகின்றது. 

படங்கள் பற்றிய அறிமுகம்

இவ்வாறு ஆரம்ப காலம் முதல் இன்று வரை படங்கள் வளர்ச்சி பெற்று வருகின்றது. தற்பொழுது பல்வேறு வகையான புவியியல் சார் தேவைகளுக்கு மிக துல்லியமான தகவல்களினை படமாக்கும் நோக்கத்துக்காக பல்வேறு பட்ட முறைகள் காணப்படுகின்றன. அவையாவன பூகோள நிறையறி முறைமை, புவியியல் தகவல் முறைமை, தொலையுணர்வு தொழில்நுட்பம் போன்றனவாகும். 

புவி மேற்பரப்பில் பௌதீக பண்பாட்டு அம்சங்கள், கோள்கள், நட்சத்திரங்கள், அகல நெடுங்கோடுகள், மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட அம்சங்களான நிர்வாக எல்லைகள் போன்றன யாவும் படத்தில் அமைத்து காட்டப்படும். இடவிளக்கப்படத்தினை பொறுத்தவரை அவற்றில் அளவுத்திட்டத்துக்கு ஏற்ப நிலக்காட்சியினை சுருங்க காட்டுதல், அமைவிடம் மற்றும் திசையினை  அடையாளமிடல்,இடம்சார் தகவல்களை அடையாளம் செய்தல் போன்றவற்றினை கொண்டுள்ளது.

படங்கள் பற்றிய அறிமுகம்

படங்களினை பொறுத்தவரை அவை இரண்டாக பாகுபடுத்தப்படும். அவையாவன கருப்படங்கள் மற்றும் இடவிளக்கப்படங்கள் போன்றனவாகும். கருப்படங்கள் என்பது குறிப்பிட்ட ஒரு விடயத்தினை மட்டும் கருத்தில் கொண்டு அவற்றுக்குரிய படத்தினை வரைதல் என பொருள்படும். இடவிளக்கப்படம் என்பது புவியில் உள்ள பௌதீக மற்றும் பண்பாட்டு அம்சங்களை ஒரு தட்டையான தாளில் வரைவதாக பொருள்படும்.


Wednesday, February 17, 2021

திருகோணமலை துறைமுகம்

 இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் இந்திய பெருங்கடலின் மையத்தில் திருகோண மலையில் அமைந்துள்ள ஒரு பாதுகாப்பான இயற்கை துறைமுகம் ஆகும். இது உலகளாவிய ரீதியில் பிரபல்யம் பெற்ற ஒரு  சர்வதேச வர்த்தகம் மற்றும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிலையமாக காணப்படுகின்றது. ஐரோப்பிய குடியேற்ற காலத்தில் இத்துறைமுகத்தினை கைப்பற்ற பல யுத்தங்கள் நடைபெற்றன. ஆரம்ப காலத்தில் போத்துக்கீசர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் போன்றோர் இத்துறைமுகத்தினை கைப்பற்றி ஆட்சியினை மேற்கொண்டனர்.

திருகோணமலை துறைமுகத்தின் அமைவிடத்தினை அவதானிக்கும்போது வட அகலாங்கு 8 பாகைக்கும் கிழக்கு நெட்டாங்கு 81 பாகைக்கும் இடையில் காணப்படுகின்றது. இதன் பரப்பளவு 5261 ஹெக்டேயர்ஸ்  ஆகும். இந்த துறைமுகம் இரண்டு பகுதிகளை உள்ளடக்கியது. அவை உட் துறைமுகம், மற்றும் வெளித்துறைமுகம் ஆகும். உட்துறைமுகம் பாறைகள் மற்றும் நிலங்கள் சூழ்ந்ததோடு மட்டுமில்லாமல் இயற்கையாக ஆழம் அதிகமாக இருக்கும். இதன் காரணமாக நீர்முழ்கி கப்பல்கள் முதல் சாதாரண கப்பல்கள் வரை  இங்கு பாதுகாப்பாக தரித்து நிற்க முடியும். 

திருகோணமலை துறைமுகம்

திருகோணமலை துறைமுகத்தின் நுழைவாயில் 500 மீட்டர் அகலத்தினை கொண்டிருக்கும். இது வாரத்தில் ஏழு நாட்களும் 24 மணி நேரமும் திறக்கப்பட்டிருக்கும். இது மே தினம் அன்று மாத்திரம் பூட்டப்பட்டிருக்கும். திருகோணமலை துறைமுகம் கிழக்கு மாகாணத்தின் நுழைவு பிரதேசமாகவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை துறைமுகம் வர்த்தகம்,  வணிகம், உள்நாட்டு, வெளிநாட்டு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செயற்பாடுகள், சுற்றுலா சார்ந்த விடயங்களுக்கு ஏற்ற இடமாக திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது. இது 1956ம் ஆண்டு வர்த்தக நோக்குடைய  துறைமுகமாக மாற்றியமைக்கப்பட்டது. தற்பொழுது இந்த திருகோணமலை துறைமுகம் இலங்கை துறைமுக சேவை திணைக்களத்திற்கு கீழ் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை துறைமுகம்

இது உலகின் முதலாவது ஆழ்கடல் சார்ந்த துறைமுகமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இங்கு நீர் சார்ந்த பகுதியின் அளவு 1630 ஹெக்டேயர்ஸ் ஆக காணப்படுகின்றது. இது உலகின் இரண்டாவது பெரிய இயற்கை துறைமுகமாக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. திருகோணமலை துறைமுகம் இலங்கையின் வரலாற்றிலே முக்கிய தளமாக காணப்படுகின்றது. பல்வேறு கடல் சார் யுத்தங்களை நாடர்த்துவதற்கும் கண்காணிப்புக்கும் முக்கிய இடமாக இன்று வரை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 


Tuesday, February 16, 2021

நிலவில் தடம் பதித்த நீல் ஆம்ஸ்ரோங்

 1969ம்  ஆண்டில் நிலவுக்கு போய் உணவு உண்டவர் நீல் ஆம்ஸ்ரோங் ஆவார். மனித குலத்தின் முன்னேற்றத்தின் பெரும் பாய்ச்சலாக விண்ணில் காலடி வாய்த்த ஆம்ஸ்ரோங்கின் மரணம் மனித குலத்திற்கே  பேரிழப்பாகும். அவ் வகையில் நிலவில் முதன் முதலாக 1969ம் ஆண்டு யூலை மாதம் 20ம் திகதி கால் பதித்த அமெரிக்காவின் விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ரோங் தனது 82ஆவது வயதில் காலமானார். இவரது இழப்பிற்கு முன்னால் ஜனாதிபதி பராக் ஒபாமா உட்பட உலகின் முன்னணி தலைவர்கள் பலரும் ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவித்துள்ளனர்.

1969ம் ஆண்டில் ரஷ்ய விஞ்ஞானிகள் நிலவுக்கு விண்கலத்தை செலுத்தவிருந்த வேளையில் திடீரென அமெரிக்கா தான் விண்கலத்தை செலுத்தியதாகவும் அதில் நீல் ஆம்ஸ்ரோங் சென்றதாகவும் தெரிவித்தது. இதனை அடுத்து ரஷ்யா தான் செலுத்தவிருந்த விண்கலத்தை நிறுத்தி கொண்டது. நீல் ஆம்ஸ்ரோங் உண்மையாகவே நிலவில் தரையிறங்கினாரா என்ற சந்தேகங்கள் இன்னமும் பரவலாக  இருக்கிறது. காரணம் அமெரிக்கா வெளியிட்ட புகைப்படம் தான். நீல் ஆம்ஸ்ரோங் நிலவில் அமெரிக்க கொடியை நாட்டுவது போல அமைந்துள்ள அப்புகைப்படத்தில் மூன்று கொடியின் நிழல்கள் காணப்படுகின்றது. நிலவில் ஒரு பொருளை நட்டால் அதன் நிழல் ஒன்றாக தான் தெரியும். காரணம் சூரிய ஒளி. 3 சூரியன் இருந்தால் தான் 3 நிழல்  தோன்றும். எனவே இதனை வைத்து பலர் நீல் ஆம்ஸ்ரோங் நிலவுக்கு செல்லவில்லை என்று வாதிடுகின்றனர். ஆனால் அவர் அமெரிக்க விண்கலத்தில் விண்வெளிக்கு சென்றதாகவும் பின்னர் அங்கிருந்து திரும்பியதாகவும் சொல்லப்படுகிறதே தவிர அவர் நிலவில் காலடி பாதிக்கவில்லை என்று பலராலும் வாதிடப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
நீல் ஆம்ஸ்ரோங்

அமெரிக்காவின் ஒகியோ மாகாணத்தில் உள்ள வாபா கோநெட்டோ என்ற சிறிய நகரில் பிறந்த ஆம்ஸ்ரோங் புருடியு பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் படிப்பை முடித்த பின்னர் தன்னுடைய 30ம் வயதில் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பயிற்சி விமானியாக பணியில் சேர்ந்தார். தொடர்ந்து அவர் அடிப்படியாக முன்னேறி தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இந்தநிலையில் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் நிலவு குறித்த பல்வேறு சோதனைகளை மேற்கொண்டு வந்தது. இதற்காக அப்பலோ விண்கலம் தயார் செய்யப்பட்டது. அப்பலோ ஒன்று மற்றும் இரண்டு என தயாரிக்கப்பட்டு இறுதியில் அப்பலோ 2 என்ற விண்கலம் மூலம் விண்ணில் பறந்தார்.

அமெரிக்காவின் தற்போதைய மக்கள் தொகையில் 1/6 பங்கு மட்டுமே கொண்டிருந்த காலகட்டத்தில் நிலவில் காலடி பதித்தார். நிலவில் இறங்கி நடக்க தொடங்கியதை அடுத்து 20 நிமிடங்களுக்கு பின்னர் தன்னுடைய சக விஞ்ஞானியான புஷ் ஆல்ட்ரின் உடன் இணைந்து கொண்டு நடந்து சென்று நிலவின் ஈர்ப்பு சக்தி மற்றும் பாறை மாதிரிகள் மற்றும் புகைப்படங்களை எடுத்துக்கொண்டார்.
நீல் ஆம்ஸ்ரோங்

பின்னர் பூமிக்கு திரும்பி ஆம்ஸ்ரோங் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சி மற்றும் தொழில் நுட்பப்பிரிவில் ஆலோசகராக பணிபுரிந்தார். அதன்பின் சின்சினாடி பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் பாட பிரிவில் பேராசிரியராக பணியாற்றினார். பின்பு இவர் சில மாதங்களாக இதய நோயினால் பாதிக்கப்பட்டு இவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 

எத்தனை சர்ச்சைகள் இருந்தாலும் நீல் ஆம்ஸ்ரோங் சந்திரனில் காலடியை வைத்ததாகவே கருதப்படுகின்றது. அக்காலடி அவர் மறைந்தாலும் மனித குல வரலாறு உள்ள வரை நிலைத்திருக்கும். 

Monday, February 15, 2021

யுரேனஸ் கோள் பற்றிய தகவல்கள்

 சூரிய குடும்பத்தில் இறுதி பகுதியில் இருக்கின்ற முக்கிய கோளாக யுரேனஸ் கோள் காணப்படுகின்றது. இது சூரியனில் இருந்து 1753635,815 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் காணப்படுகின்றது. இந்தக்கோள் பக்கப்பார்வை கொண்ட கோளாகவும் சரிவினை கொண்ட கோளாகவும் விளங்குகின்றது.

இதனை 1781ம் ஆண்டு வில்லியம் ஹார்ச்சல் கண்டு பிடித்தார். இது  நுண்துளைகாட்டி மூலம் கண்டுபிடிக்கப்பட்ட கோளாக காணப்படுகின்றது. இது பூமியினை விட பெரியதாக காணப்படுகின்றது. இதற்கு 27 நிலவுகள் உள்ளது. இது தோன்றிய காலத்தில் இருந்து நான்கு தரம் பூமியை விட அகலமாக மாறியது.

யுரேனஸ் கோள்


இது சூரியனில் இருந்து ஏழாவது கோளாக காணப்படுகின்றது. ஒரு சுற்றுவட்ட பாதையினை சுற்றி முடிக்க 84 வருடங்கள் எடுக்கும். இதனை யுரேனர் ஆண்டு என அழைத்துக்கொள்ளுவார்கள். இது ஒரு நாளினை சுற்ற 17 மணித்தியாலங்கள் எடுக்கும். இதனது விட்டம் 25362 கிலோமீட்டர்கள் ஆகும். இந்த யுரேனஸ் கோளில் பனி,  நீர்,மெதேன் வாயு,  அமோனியா, சிறிய கற்பாறைகள் போன்றன காணப்படுகின்றது.

யுரேனஸ் கோளுக்கு 13 வளையங்கள் உண்டு. இதனுடைய வளையங்கள் உள்வளையம், வெளிவளையம் என பாகுபடுத்தப்படுகின்றது. உள்வளையங்கள் யாவும் கருமையான நிறத்திலும், மெல்லியதாகவும் காணப்படும். வெளிவளையங்கள் அனைத்தும் பிரகாசமான நிறத்தில் இருக்கும்.

யுரேனஸ் கோள்

யுரேனஸ் கோளினுடைய செல்லப்பெயர் ''The bulls eye planet'' ஆகும். இது தவிர இந்த கோளுக்கு நான்கு படைகள் காணப்படுகின்றது. அவையாவன Outer Atmosphere, Atmosphere, Mantle, Core போன்றனவாகும். Outer Atmosphere இல் மேல் படை முகில்கள் காணப்படுகின்றன. Atmosphere இல்  நீராவி, கீலியம், மெதேன் போன்றனவும், Mantle இல் நீர், அமோனியா, மெதேன், பனி போன்றனவும், Core இல் சிலிக்கேற்று, இரும்பு, நிக்கல், பாறைகள் போன்றனவும் காணப்படுகின்றன. 

யுரேனஸ் கோளில்  நாங்கள் உயிர்வாழ முடியாத நிலை காணப்படுகின்றது. ஏனெனில் இங்கு நீர் காற்று வாழ்வதற்கான சூழல் போன்றன எதுவும் இல்லை என்பதாகும்.   இது வெள்ளிக்கோளை போல கிழக்கில் இருந்து மேற்காக சுற்றும். இது மற்றைய கோள்களை போல நிலைக்குத்தாக சுழறாமல் கிடையாகவே சுழலும் தன்மை கொண்டது.

Sunday, February 14, 2021

சூரியனின் படையமைப்புகள்

 சூரிய குடும்பத்தில் மிக முக்கியமான ஒன்றாக இருப்பது சூரியன் ஆகும். இது சூரிய குடும்பத்தின் மத்தியில் காணப்படுகின்றது. இது புவியின் சுற்றுவட்ட பாதையில் இருந்து சராசரியாக 93 மில்லியன் மைல் தூரத்தில் இருக்கிறது. இந்த சூரியனில் 92.1% ஆன ஐதரசனும் , 7.8% ஆன கீலியமும் , காபன் 0.02% உம், நைதரசன் 0.008% உம், ஓட்சிசன் 0.06% உம், நியோன் 0.01% உம், மக்னீசியம் 0.003% உம், சிலிக்கன் 0.004% உம், சல்பர் 0.002% உம், இரும்பு 0.004% உம் காணப்படுகின்றது. சூரியனுக்கு வளையங்கள் இல்லை.

சூரியனது உட்பாக வெப்பநிலை 15 மில்லியன் பாகை செல்ஸியஸ் ஆக காணப்படுகின்றது. இது சூரிய குடும்பத்தில் 99.8% ஆன திணிவினை கொண்டிருக்கின்றது. இது பூமிக்கு மிக அருகில் இருக்கும் நட்சத்திரம் ஆகும். சூரியனின் விட்டம் 1.39  கிலோமீட்டர்கள் ஆக காணப்படுகின்றது. இதன் வயது கிட்டதட்ட 4.6 பில்லியன் வருடங்கள் ஆகும். சூரியனில் 7 வகையான படை அமைப்புகள் காணப்படுகின்றன. அவையாவன Corona layer, Transition region, Chromosphere layer, photosphere layer, Core, Convection zone, Radiative zone போன்றனவாகும். 

சூரியனின் படையமைப்புகள்

photosphere layer பற்றி அவதானிக்கின்றபோது இது  மிகவும் ஆழமான ஒரு படையாக காணப்படுகின்றது. இந்த படையை நாம் வெற்றுக்கண்களால் நேரடியாக அவதானிக்கலாம். புவி மேற்பரப்பில் இருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் இந்த படை காணப்படுகின்றது. இது பல முடிச்சுக்களினால் சூழப்பட்டு இருக்கிறது. இதன் வெப்பநிலை 3700-6200 பாகை செல்ஸியஸ் ஆகும்.

Chromosphere layer பற்றி அவதானிக்கின்றபோது இது 250-1300 மைல் இடையில் காணப்படுகின்றது. இதன் வெப்பநிலை சராசரியாக 3700-7700 பாகை செல்ஸியஸ் ஆகும். ஆகவே இது வெப்பம் கூடிய ஒரு படையாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Transition region இனை அவதானிக்கும்போது இது  மிகவும் மெல்லிய படையாக காணப்படுகின்றது. இது Chromosphere layer மற்றும்  corona layer ஆகியவற்றுக்கு இடையில் அமைந்துள்ளது. இதன் வெப்பநிலை சராசரியாக 7700- 500000 பாகை செல்ஸியஸ் ஆக காணப்படுகின்றது. 

சூரியனின் படையமைப்புகள்

Corona layer பற்றி அவதானிக்கின்றபோது இது 1300 மைல் இல் இருந்து ஆரம்பிக்கின்றது. தொடர்ந்து இது photosphere layer வரை பரந்துள்ளது. இந்த படையின் வெப்பநிலை சராசரியாக 500000 பாகை செல்ஸியஸ் ஆகும். இதனை வெற்றுக்கண்களால் பார்க்க முடியாது.

சூரியனில் காணப்படுகின்ற இந்த படைகள் உட்படைகள், வெளிப்படைகள் என பாகுபடுத்தப்படுகின்றது. உட்படைகளில் Core, Convection zone, Radiative zone  போன்றனவும் வெளிப்படைகளில் Corona layer, Transition region, Chromosphere layer, photosphere layer போன்றனவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 



நாசா படைத்த புதிய சாதனை

 கெப்லர் விண்வெளி தொலைநோக்கியொன்றின் மூலம் நாசா 7 புதிய கிரங்கங்களை கண்டுபிடித்த்துள்ளது. சூரியகுடும்பத்தில் உள்ள எந்த கிரகத்தை எடுத்தாலும் ...