Wednesday, March 31, 2021

புவிநடுக்கத்தினால் ஏற்படும் பாதிப்புக்கள்

 உயிரிழப்புக்கள் ஏற்படுதல்- புவிநடுக்கம் ஒரு இடத்தில் ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில் அதன் தாக்கத்துக்கு ஏற்ப உயிரிழப்புகளும் ஏற்படும். குறிப்பாக 2004ம் ஆண்டு இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 280000 பேர் உயிரிழந்தார்கள். 2010ம் ஆண்டு கெயிட்டியில் ஏற்பட்ட புவிநடுக்கத்தினால் 16000 பேர் உயிரிழந்தனர். 2011ம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட புவிநடுக்கத்தினால் 18184 பேர் இறந்தார்கள். 2015ம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 4510 பேர் உயிரிழந்தனர். 2018ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 2256 பேர் உயிரிழந்தனர்.

சொத்துக்கள் அழிவடைதல்- புவிநடுக்கத்தினால் மனித உயிரினங்கள் அழிவடைவது மட்டுமில்லாமல் சொத்துக்களும் அழிகின்றன. குறிப்பாக கட்டிடங்கள், வீடுகள் ஆகியன இடியுண்டு அழிகின்றன. 2014ம் ஆண்டு கலிபோர்னியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 1 பில்லியன் டொலர் செலவு ஏற்பட்டது. 2011ம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 360 பில்லியன் டொலர் செலவு ஏற்பட்டது. 2015ம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட புவிநடுக்கத்தினால் 1000 வீடுகள் அழிக்கப்பட்டது.

தாவர போர்வைகள் அழிவடைதல்- நிலநடுக்கம் ஏற்படுவதனால் அதிகளவான மரங்கள் வேரோடு சாய்க்கப்படுகின்ற நிலை ஏற்படுகின்றது. இதனால் அதிகளவான தாவர போர்வைகள் அழிவடைகின்றன. தாவர போர்வைகள் அழிவடைவதனால் காலப்போக்கில் புவிவெப்பமடைதல் தொடர்பான பிரச்சனை ஏற்படுகின்றது.

நிலச்சரிவுகள் ஏற்படுதல்- புவிநடுக்கத்தினால் கட்டிடங்கள் சரிந்து  விழுதல், மரங்கள் சரிதல் ஆகியவற்றினால் பாறைப்படைத்தளங்கள் விரிசல் நிலையினை அடைகின்றது. குறிப்பாக 2015ம் ஆண்டு நேபாள புவிநடுக்கத்தினால் கிராமிய பகுதியில் மட்சரிவு ஏற்பட்டது. 2011ம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட புவிநடுக்கத்தினால் மட்சரிவு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சுனாமி அலைகள் உருவாதல்- குறிப்பாக புவிநடுக்கத்தின் அளவு 8 ரிக்டர் இலும்  அதிகமானால் சுனாமி அலைகள் தோற்றுவிக்கப்படும். இதனால் அதிகளவான உயிரிழப்புக்கள் ஏற்படும். 1960ம் ஆண்டு சிலியில் ஏற்பட்ட புவிநடுக்கத்தினால் சுனாமி அலைகள் உருவாகியது. இதனால் பாதிப்புக்கள் ஏற்பட்டது. 2004ம் ஆண்டு இந்தோனேசியாவில் 9.1 ரிக்டர்  அளவில் ஏற்பட்ட புவிநடுக்கத்தினால் சுனாமி ஏற்பட்டது. 2011ம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட 7.9 ரிக்டர் அளவு புவிநடுக்கத்தினால் சுனாமி அலைகள் தோற்றுவிக்கப்பட்டது. 

Tuesday, March 30, 2021

வரட்சியினால் ஏற்படும் பாதிப்புக்கள்

 விவசாயம் பாதிப்படையும்- வரட்சி காரணமாக நீர்நிலைகள் வற்றுதல் மற்றும் தாவரப்போர்வைகள் அருகுதல்  போன்றவை நடைபெறுகின்றன.  குறிப்பாக ஈரானில் 94% ஆன விவசாயம் சார்ந்த பாதிப்பும், பாகிஸ்தானில் 61% ஆன பாதிப்பும், இந்தியாவில் 25% ஆன பாதிப்பும், ஆப்கானிஸ்தானில் 33% ஆன பாதிப்பும் ஏற்படுகின்றது. இதுதவிர மொறாக்கோவில் 70% ஆன நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பசி, பட்டினி ஏற்படுதல்- வரட்சியின் நிமிர்த்தம் விவசாயம், வாழ்வாதாரம் ஆகியன  பாதிக்கப்படுகின்றன. இதனால்  பஞ்சம், பசி, பட்டினி முதலானவை ஏற்படுகின்றது. எத்தியோப்பியாவில் 600 மில்லியன் மக்களில் 8 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1.4 மில்லியன் குழந்தைகளும் அடங்குகின்றனர். எதித்ரியாவில் 1.3 மில்லியன் மக்கள் உணவுப்பற்றாக்குறையினால் அக்கறைப்படுகின்றனர். சோமாலியாவில் 1 மில்லியன் மக்கள் உணவுப்பிரச்சனையினை எதிர்நோக்குகின்றனர். ஆப்கானிஸ்தானில் 2.5 மில்லியன் மக்களும், இந்தியாவில் 130 மில்லியன் மக்களும், உகாண்டாவில் 550000 மக்களும் வரட்சியினால் உணவு பற்றாக்குறையை எதிர்நோக்குகின்றனர்.

காட்டுத்தீ ஏற்படுதல்- வரட்சியினால் வெப்பம் சில பகுதிகளில் உயர்வாக இருக்கும். இதனால் காற்று வீசும்போது மரங்கள் ஒன்றோடுஒன்று உராயும்போது காட்டுத்தீ ஏற்படுகின்றது. குறிப்பாக 2010ம் ஆண்டு  பொலிவியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ, 2012ம் ஆண்டு மெக்சிக்கோவில் ஏற்பட்ட  காட்டுத்தீ, 2015ம் ஆண்டு கொலராடோவில் ஏற்பட்ட காட்டுத்தீ, 2014ம் ஆண்டு கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ போன்றவற்றினை குறிப்பிட்டுக்கொள்ளலாம்.

இடப்பெயர்வு ஏற்படுதல்-  பஞ்சம், பசி, பட்டினி காரணமாக மக்களிடையே பிணக்குகள் ஏற்படுகின்றது. மக்கள் தமக்கு தேவையான பொருட்களினையும், சேவைகளினையும் பெற்றுகொள்ள இடப்பெயர்வுகளை மேற்கொள்கின்றனர். குறிப்பாக ஆப்கானிஸ்தானில் 250000 மக்களும், தார் பாலைவனப்பகுதியில் 100000 மக்களும் இடப்பெயர்வினை மேற்கொண்டுள்ளனர்.

நீர் பற்றாக்குறை ஏற்படுதல்- வரட்சி காரணமாக நீர்நிலைகளில் நீர் வற்றுதல், இடம்பெறுகின்றது. இதனால் நீர் பற்றாக்குறை ஏற்படுகின்றது. அத்துடன் மக்கள் அசுத்தமான நீரினை பருகவேண்டிய நிலைக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக சீனாவில் வட சான்ஷி மாகாணத்தில் 3 மில்லியன் மக்களும், பாகிஸ்தானில் 3 மில்லியன் மக்களும், இந்தியாவில் குஜராத், ராஜஸ்தான், ஆந்திராவில் 130 மில்லியன் மக்களும் நீர் பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

Monday, March 29, 2021

உலகின் சூழல் பிரச்சனைகள்

 காலநிலை மாற்றம்- உலகளாவிய ரீதியில் கடந்த நூற்றாண்டுகளாக காலநிலை மாற்றம் நடைபெற்று வருகின்றது. இந்த காலநிலை மாற்றத்துக்கு பிரதான காரணியாக இருப்பது பச்சைவீட்டு வாயுக்கள் ஆகும். இந்த பச்சை வீட்டுவாயுக்களின் அதிகரித்த தன்மையினால் புவி வெப்பமடைதல் துரிதப்படுத்துகின்றது. இந்த காலநிலை மாற்றத்துக்கு முக்கிய காரணமாக மனித நடவடிக்கைகள்,  கைத்தொழில்கள்,நகராக்க செயற்பாடுகள், விவசாயம் ஆகியவற்றினை எடுத்துக்கொள்ளலாம். இந்த காலநிலை மாற்றம் காரணமாக உலகில் பல்வேறு சூழல் ,சமூக, பொருளாதார  ரீதியான பிரச்சனைகள் ஏற்படுகின்றது. அதாவது பனிப்படலங்கள் உருகுதல், வரட்சி, சூறாவளி, புயல்கள், கடல்நீர் மட்டம் அதிகரித்தல், விவசாய  பாதிப்புக்கள், எதிர்காலங்களில் தீவுகள் நாடுகள் கடல் நீரில் மூழ்குகின்றன. 

காடழிப்பு- உலகளாவிய ரீதியில் முக்கிய பிரச்சனையாக காடழிப்பு காணப்படுகின்றது. 2030களில் 15% ஆன காடழிப்பு கைத்தொழில் செயற்பாடுகள் காரணமாக நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. அத்துடன் 70% ஆன தாவரங்கள், விலங்குகள் காடுகளில் வாழ்கின்றன. இந்த காடுகளில் 10% ஆன காடுகள் இன்று ,விறகு தேவை, தளபாட உற்பத்திக்காக காடுகள் அழிக்கப்படுகின்றது. குறிப்பாக அமெரிக்கா, நெதர்லாந்து பெல்ஜியம், இத்தாலி இத்தாலி ஆகிய நாடுகள் ஏற்றுமதி செய்வதற்காக காடுகளை அழிக்கின்றனர். இதன் காரணமாக எதிர்காலங்களில் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் சூழல் மற்றும் சமூக ரீதியான பிரச்சனைகள் ஏற்படும்.

நீர் நெருக்கடி ஏற்படுதல்- நீரானது மாசடைவதாலும் , காலநிலை  மாற்றம், அளவுக்கதிகமாக  நீரை  பயன்படுத்துதல், சனத்தொகை  அதிகரிப்பு,போன்ற காரணங்களால் உலகில் நீர் நெருக்கடி ஏற்படுகின்றது. இந்த நீர் நெருக்கடியினால் இன்று 2.8 பில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2050ம் ஆண்டுகளில் 4.8-5.7 பில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என எதிர்வுகூறப்படுகின்றது. இந்த நீர் நெருக்கடி ஆபிரிக்கா, ஆசியா கண்டத்தில் அதிகளவு இடம்பெறுகின்றது.


சூழற்தொகுதியும் ஆபத்தான உயிரினங்களும்- இன்று உலகில் காணப்படுகின்ற  சூழல் தொகுதியில் பல்வேறு சிக்கல் தன்மைகள் காணப்படுகின்றது. இதனால் அந்த சூழல் தொகுதியில் வாழும் உயிரினங்களுக்கு ஆபத்தான சூழ்நிலை உருவாகின்றது. இதனால் எதிர்காலங்களில் குறிப்பிட்ட சூழலில் உயிரினங்கள் வாழமுடியாத நிலை ஏற்படுகின்றது. குறிப்பாக 2050களில் 10 வகையான தாவரங்களும், 10 வகையான  விலங்குகளும் இல்லாமல் போக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

Saturday, March 27, 2021

காட்டுத்தீயினால் ஏற்படும் விளைவுகள்

 காடுகள் மற்றும் தாவரங்கள் அழிக்கப்படல்- காட்டுத்தீ ஏற்படுவதனால் காடுகள் எரிவடைகின்றன. இதன் காரணமாக  காட்டுவாழ் உயிரினங்கள் அழிவடைகின்றன. குறிப்பாக 2017ம் ஆண்டு கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக 200000 ஹெக்டேயர்ஸ் புல்நிலங்கள் அழிவுற்றன. 2018களில் நவம்பர் மாதம் கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 153000 ஏக்கர் காடுகள் அழிவடைந்தன. 

உயிரிழப்புகள்  ஏற்படுதல்- காட்டுத்தீ ஏற்படுவதன் காரணமாக அதில் சிக்குண்டு பல உயிர்கள் அழிவடைகின்றன. குறிப்பாக 1991ம் ஆண்டு கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக 25 பேர் இறந்தார்கள். 2017ம் ஆண்டு சிலியில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக 11 பேர் உயிரிழந்தார்கள், 2018ம் ஆண்டு கிரீஸ், லற்ருவியா , சுவீடன் ஆகிய இடங்களில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக 92 பேர் உயிரிழந்தார்கள். 2018ம் ஆண்டு கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக 98 பேர் இறந்தமை குறிப்பிடத்தக்கது.
wildfire

வீடுகள் மற்றும் கட்டிடங்கள் அழிவடைதல்-  பிரதேசத்தில் காட்டுத்தீ ஏற்படும்போது அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள வீடுகள், பொதுக்கட்டிடங்கள் மற்றும் வேறு கட்டிடங்கள் போன்றவற்றில் காட்டுத்தீ பரவும் சந்தர்ப்பம் ஏற்படும். இதனால் அவை அழிவடைகின்ற ஒரு நிலை உருவாகும். குறிப்பாக 2017ம் ஆண்டு வட கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் 8900 பொதுக்கட்டிடங்கள் பாதிக்கப்பட்டன. 2017ம் ஆண்டு சிலியில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக 1000 பொதுக்கட்டிடங்கள் அழிவுற்றன. 2018ம் ஆண்டு கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக 1604 பொதுக்கட்டிடங்கள் அழிவுற்றன.

சூழல் வெப்பநிலை  அதிகரிக்கும்- ஒரு பிரதேசத்தில் காட்டுத்தீ ஏற்படும் சந்தர்ப்பத்தில் அந்த பகுதி எங்கும் வெப்பநிலை அதிகரித்த நிலையில் இருக்கும். இந்த அதிகரித்த வெப்பநிலை காரணமாக புவி வெப்பமடைதல் தொடர்பான பிரச்சனை ஏற்படுகின்றது.
wildfire

நோய்கள் உருவாகும்- காட்டுத்தீயினால் ஏற்படும் சாம்பல்கள் மற்றும் தூசு துணிக்கைகள் காற்றின் மூலம் பரவி மனிதனின் உடலில் புகும்போது சுவாச நோய்கள், சரும நோய்கள் போன்றன ஏற்படுகின்றன. குறிப்பாக நெருப்பின் மூலம் காபனீரொட்சைட், மொனக்ஸ்சைட், நைதரசன் ஓட்சைட், போன்றவற்றினால் சுவாச ரீதியான பிரச்சனைகள் ஏற்படுகின்றது. 2007ம் ஆண்டு சாண்டியாகோ பிரதேசத்தில் ஏற்பட்ட காடதி காரணமாக ஆஸ்துமா நோய் அதிகளவில் ஏற்பட்டது.

Friday, March 26, 2021

மத்தியதரை விவசாயம்

 உலகின்  பாகுபாடுகளில் முக்கியம் பெற்ற வகையாக மத்தியதரை விவசாயம் காணப்படுகின்றது. இந்த விவசாயம் மத்தியதரை கடலினை சுற்றியுள்ள பகுதிகளிலும் உலகின் மத்தியதரை காலநிலை காணப்படுகின்ற பிரதேசங்களிலும் மேற்கொள்ளப்படுகின்றது. இவ்வாறான இந்த மத்தியதரை விவசாயம் மேற்கொள்ளப்படுகின்ற பகுதிகளாக ஸ்பெயின், இத்தாலி, கிரீஸ், குரோஷியா, பொன்சியா, அல்பனியா, துருக்கி, அல்ஜீரியா,  லிபியா, பிரான்ஸ், மொறாக்கோ, துனிசியா, இஸ்ரேல் ஆகிய இடங்களும் மத்தியதரை கடலுக்கு அப்பால் கலிபோர்னியா,  சில்லி, தென்னாபிரிக்கா, மறேடார்லிங் நதியினை  அண்டிய தென் அவுஸ்ரேலியா பகுதி போன்றவற்றில் மேற்கொள்ளப்படுகின்றது.

இந்த விவசாயமானது ஈரலிப்பான மாரியில் பயிரிட்டு 6 மாதங்கள் உள்ளடங்கலாக கோடையில் அறுவடை செய்யப்படுகின்றது. அத்துடன் மத்தியதரை காலநிலைக்கு ஏற்றவாறு குறைந்த வெப்பநிலையில் வளரக்கூடியதாக காணப்படுகின்றது. அத்துடன் மலைப்பாங்கான பகுதிகளிலும் மேய்ச்சல் நிலங்களிலும் பயிர்ச்செய்கை பண்ணப்படுகின்றது. 

மத்தியதரை காலநிலை

மத்தியதரை விவசாயத்தில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளவதற்கு தேவையான மழைவீழ்ச்சியினை அவதானிக்கும்போது 25-75 சென்ரிமீட்டர்  தேவை. இவ்வாறான அளவீட்டில் பயிர்கள் வளரும் . இந்த மத்தியதரை விவசாயத்தில் மரக்கறி  வகைகள்,  ,பழங்கள், புற்கள், தானியவகை முதலானவை பயிரிடப்படுகின்றன. குறிப்பாக மரக்கறிகளாக பீற்றூட், வெங்காயம், கரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ் போன்றனவும், பழங்களை பார்க்குமிடத்து ஆப்பிள், பியர்ஸ், செரி, திராட்சை, தோடை, எலுமிச்சை போன்றனவும், தனியவகைக்குள்  கோதுமை, அவரை, பட்டானிக்கடலை, பார்லி போன்றன பயிரிடப்படுகின்றது. இதுதவிர ஒலிவ், அத்தி, பேரிந்து, அல்பெல்பா புற்கள், சிற்றிஸ் போன்றனவும் பயிரிடப்படுகின்றது.

மத்தியதரை காலநிலை

இந்த மத்தியதரை விவசாயமானது 4 வகையான பிரிவுகளில் உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படுகின்றது. அவையாவன மழையினை நம்பிய பயிர்ச்செய்கை, மானாவாரி பயிர்ச்செய்கை, விலங்கு தீனி மற்றும் மரக்கறி வகைகள், மந்தை மேய்த்தல் மற்றும் விலங்கு வளர்ப்பு போன்றனவாகும்.

மத்தியதரை விவசாயமானது ஆரம்பகாலங்களில் தன்னிறைவு பொருளாதாரத்துக்கு ஏற்ற போல பயிரிடப்பட்டது. ஆனால் இன்று இவை ஏற்றுமதியும் செய்யப்படுகின்றது. குறிப்பாக கலிபோர்னியாவில் தோடை, எலுமிச்சை, திராட்சை ஆகியன வர்த்தக நோக்கத்துக்காக பயிரிட்டு வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இதுதவிர பழங்களினை பதப்படுத்தி  ஜாம் ஆகவும், பழங்கள் ஆகவும் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதனை காணக்கூடியதாக உள்ளது. இதுதவிர இவ் மத்தியதரை விவசாயத்தில் பயிர் மேற்கொள்கின்ற பகுதியினை அதிக மழைக்காலத்தில் பாதுகாக்கும் நுட்பமானது மேற்கொள்ளப்படுகின்றது. இதனை ஸ்பெயின், கலிபோர்னியா ஆகிய நாடுகளில் அவதானிக்கலாம். 

Thursday, March 25, 2021

பாலைபரவலினால் ஏற்படுகின்ற பாதிப்புக்கள்

 விவசாயம் பாதிக்கப்படுகின்றது- குறிப்பாக உலகில் பாலைபரவுதல் செயற்பாடுகள் காரணமாக இன்று விவசாய நிலங்களின் எண்ணிக்கை குறைவடைந்து செல்கின்றது. அத்துடன் விவசாயத்தினை மேற்கொள்வதற்கு போதுமான நீரும் கிடைக்கப்பெற மாட்டாது. வரட்சியானது அந்த பிராந்தியத்தில் ஏற்படும் போது எதிர்வரும் காலங்களில் விவசாயத்தினை செய்யமுடியாத நிலை ஏற்படுகின்றது. குறிப்பாக இன்று பாலைபரவுதல் செயற்பாடுகள் காரணமாக 18% ஆன விவசாயமானது தரமிழந்து செல்கின்றமையினை காணலாம்.

Effects of Desertification

பசி  மற்றும்  பட்டினி ஏற்படுதல்- பாலைபரவுதல் காரணமாக விவசாயம் மற்றும் குடிநீர் கிடைக்கப்பெறாத சந்தர்ப்பத்தில் பஞ்சம், பசி, பட்டினி முதலானவை ஏற்படுகின்றது. இதனை குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளில் அவதானிக்ககூடியதாக உள்ளது. சூடானில் உணவு பஞ்சத்தால் 2.8 மில்லியன் மக்களும், எத்தியோப்பியாவில் 8 மில்லியன் மக்களும், யுனிசெப் தரவுகளின்படி 1.4 மில்லியன் சிறுவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்றும் சோமாலியாவில் 1 மில்லியன் மக்களும் 300000 சிறுவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். உகண்டாவினை பொறுத்தவரை 550000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்னீர் பற்றாக்குறை- குறிப்பாக பாலைபரவுதல் காரணமாக நீர் நிலைகள் வெப்பத்தின்  நிமிர்த்தம் வற்றிப்போகின்ற நிலை உருவாகின்றது. இதன் காரணமாக மக்களுக்கு  போதுமான அளவு நன்னீர் கிடைக்காமல் போகின்றது. இந்த பிரச்சனை காரணமாக அதிகளவு மக்கள் ஆபிரிக்க, ஆசிய நாடுகளில் பாதிக்கப்படுகின்றனர். நீர்பற்றாக்குறை காரணமாக ஈரானில் 1.7 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு , பாகிஸ்தானில் 3 மில்லியன் மக்களும், உப சகாரா பகுதியில் 319 மில்லியன் மக்களும், சீனாவில் வட ஷங்கி பகுதியில் 3 மில்லியன் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Effects of Desertification

வறுமை நிலை ஏற்படுகின்றது- பாலைபரவுதல் செயற்பாடுகளினால் விவசாயப்பகுதிகள், கால்நடைகள் போன்றன அழிவுறுகின்றன. இதன்காரணமாக மக்கள் தொழில்களில் ஈடுபட முடியாத சூழ்நிலை உருவாகின்றது. இதன்காரணமாக அங்கே வறுமை நிலை தோற்றம் பெறுகின்றது. குறிப்பாக பாலைபரவுதல் செயற்பாட்டின் காரணமாக உபசகாரா  பகுதி,வட ஆபிரிக்கா, ஐரோப்பிய பகுதிகளில் 2020ம் ஆண்டு 60 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2025ம் ஆண்டு 2.4 பில்லியன் வாழ்விட பகுதிகள் பாதிக்கப்படும் எனவும் இதனால் 700 மில்லியன் மக்கள் வாழ்வாதார ரீதியாக பாதிக்கப்படுவார்கள் என IPCC- Inter Panel Challenge of Climate Change கூறுகின்றது.

Wednesday, March 24, 2021

உலகின் பாலைபரவல்

 பாலைபரவல் செயற்பாடானது இன்று உலகளாவிய ரீதியில் நடைபெறுகின்ற முக்கிய சூழல்சார் பிரச்சனையாக காணப்படுகின்றது. இவ்வாறான பாலைபரவல் செயற்பாடு வெப்பத்தின் அதிகரிப்பு காரணமாக உலகளாவிய ரீதியில் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வெப்பநிலையினை பொறுத்தவரை கடந்த 100 வருடங்களில் 0.5 பாகை செல்ஸியஸ் இனாலும் 20ம் நூற்றாண்டுகளில் 0.75 பாகை செல்ஸியஸ் இனாலும் அதிகரித்துள்ளது. 2100களில் 1.1-6.4 பாகை செல்ஸியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கலாம் என கூறப்படுகின்றது. இதன் காரணமாக பாலைபரவல் அதிகரிக்கின்றது. இந்த பாலைபரவலானது வறண்ட பகுதிகளில் அதிகளவில் இடம்பெறுகின்றது. இதில் 1/3 பகுதி பாலைவனங்கள் ஆகும். 

இன்று உலகில் சகாரா, கலகாரி, அரேபியா, கோபி, மஞ்சூரியா, அட்ட காமா , பற்றகோனியா, அரிசோனா, மேற்கு அவுஸ்ரேலியா என 60 நாடுகளின் எல்லைகளினை தொட்டவாறு பாலைவனத்தினுடைய பரப்பு விரிவடைந்து செல்கின்றது. ஆரம்பகாலத்தில் கோபி பாலைவனமானது  வரட்சி காரணமாக டுன்ஹாங் நகரினை மண்ணினால் மூடி இன்று அந்த நகரமானது இல்லாமல் போயுள்ளது. அதுமட்டுமில்லாது சகாரா பாலைவனத்தின் தென் பகுதியில் உள்ள நைகர், சாட்,  சூடான், எத்தியோப்பியா ஆகிய நாடுகள் சகாராவின் பிடிக்குள் வருகின்றது. மற்றும் கலகாரி பாலைவனமும் இன்று விரிவடைந்துள்ளமை முக்கிய பிரச்சனையாக உள்ளது.

பாலைபரவல்

இந்த பாலைபரவலினை தூண்டும் காரணியாக காலநிலை மாற்றம் காணப்படுகின்றது. கைத்தொழில் செயற்பாடுகள் காரணமாக குளோரோ புளோரோ காபன் பாவனை அதிகரித்துள்ளது. இதனால் பச்சை வீட்டு வாயுக்களின் அளவினை கட்டுப்படுத்த முடியாத நிலை உருவாகி புறஊதா கதிர்களின் உட்பாய்ச்சல் காரணமாக பூகோள வெப்பமயமாதல் பிரச்சனை தோன்றுகின்றது. இதன் காரணமாக பாலைபரவுதல் செயற்பாடுகள் அதிகரிக்கின்றது.

பாலைபரவலினை தூண்டும் இன்னோர் காரணியாக பசும்போர்வைகளின் நீக்கம் காணப்படுகின்றது. உலகளாவிய ரீதியில் காணப்படும் காடுகளை மனிதர்கள் தமது தேவைகளின் நிமிர்த்தம் அழிக்கின்றனர். இதனால் பசும்போர்வைகள் இல்லாத ஒரு சூழல் உருவாகின்றது. இது காலப்போக்கில் பாலைபரவுதல் நிகழ்வினை தோற்றுவிக்கின்றது.

பாலைபரவல்

பாலைபரவுதலினை தூண்டும் இன்னோர் காரணியாக நாகராக்க செயற்பாடுகள் காணப்படுகின்றது. உலகின் அபிவிருத்தி எனும் போர்வையில் இன்று நகராக்க செயற்பாடுகள் துரிதகதியில் நடைபெறுகின்றது. இதற்காக தாவர பசும்போர்வைகள் அழிக்கப்படுகின்றது. இதன் காரணமாக அப்பகுதிகள் தரிசு நிலங்கள் ஆக்கப்பட்டு பிற்காலத்தில் பாலைபரவுதலினை உருவாக்கின்றது.

பாலைபரவுதலினை ஏற்படுத்தும் இன்னோர் காரணியாக முறையற்ற விவசாயம் காணப்படுகின்றது. அதாவது முறையற்ற வகையில் விவசாயத்தினை மேற்கொள்ளும் இடத்து எதிர்காலத்தில் பாலைபரவல் செயற்பாடு அதிகரிக்கின்றது. குறிப்பாக கிருமிநாசினி பயன்பாடுகள், ஒரே இடத்தில்  மீண்டும் மீண்டும் பயிர்செய்கை மேற்கொள்ளல், மண்ணரிப்பு போன்றனவற்றின் காரணமாக மண் தரமிழக்கின்றது. இதனால் தரிசு நிலங்கள் உருவாகின்றது. இது பாலைபரவலினை உருவாகின்றது.

Tuesday, March 23, 2021

புதிய கைத்தொழிலாக்கம் பெற்ற நாடுகள் பற்றி அறிந்துகொள்வோம்

 மனிதன் தனது தேவைகள் , விருப்பங்கள் போன்றனவற்றினை பெறும்பொருட்டு வரலாற்று காலம் தொட்டு கைத்தொழில்களில் ஈடுபட்டு வருகின்றான். கைத்தொழில் புரட்சிக்கு முன்னர் மனிதன் சிறுசிறு  கைத்தொழில்களை மேற்கொண்டுவந்தான். இதற்கு பின்பு 1760-1820ம் ஆண்டுகளுக்கு இடையில் இயந்திரமயமாக்கப்பட்ட கைத்தொழில் புரட்சி இங்கிலாந்தில் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து உலகில் உள்ள எல்லா நாடுகளும் சிறுகைத்தொழில் , நடுதாரகைத்தொழில் மற்றும் பாரிய கைத்தொழில்களை மேற்கொள்ள தொடங்கின. இதனை அடிப்படையாக கொண்டு புதிய கைத்தொழிலாக்கம் பெற்ற நாடுகளினை பற்றி அவதானிப்போம்.

உலகில் இன்றைய புதிய கைத்தொழிலாக்க நாடுகளானது 20ம் நூற்றாண்டு காலப்பகுதியில் இருந்து காணப்படுகின்றது. குறிப்பாக புதிய கைத்தொழில் மயமாக்க நாடுகளின் பட்டியலில் ஆசியாவின் 4 கைத்தொழில் புலிகளாக 1970-1980 களிடையே கொங்ஹொங், சிங்கப்பூர், தாய்வான், தென்கொரியா ஆகியன அங்கத்துவம் பெற்றுள்ளன. இதனை தொடர்ந்து 1994ம் ஆண்டு  மெக்சிக்கோ, இணைந்தது. 2000ம் ஆண்டுகளில்  மலேசியா,  பிலிப்பைன்ஸ்,தாய்லாந்து ஆகிய நாடுகள் அங்கம்  வகித்தன. 2025ம் ஆண்டு வியட்நாம் இணைந்துகொள்ள இருக்கின்றது.

new industrial countries

உலகளாவிய புதிய கைத்தொழிலாக்கம் பெற்ற நாடுகளினை அவதானிக்கும்போது 2021ம் ஆண்டு தரவுகளின்படி சீனா,  இந்தியா,தாய்லாந்து, மலேசியா, பிலிப்பைன்ஸ்,  துருக்கி, தென் ஆபிரிக்கா, பிரேசில், மெக்சிக்கோ, ஈரான், வெனிசுவெலா, இஸ்ரேல் ஆகியன காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

புதிய கைத்தொழிலாக்கம் பெற்ற நாடுகளின் பண்புகளை அவதானிக்கும்போது இங்கு பொருளாதார விருத்தி உயர்வாக இருக்கும்,  நகர சனத்தொகை அதிகரித்து காணப்படும், மனிதனின் வாழ்வியல் கோலங்கள் விருத்தி பெற்றிருக்கும், சிறந்த தொடர்பாடல் வசதிகளையும் உயர் தொழில்நுட்ப திறனையும் பெற்றிருக்கும், இந்த நாடுகளில் சிறப்பான கல்வி வசதிகள் காணப்படும், போக்குவரத்து வலைப்பின்னல் சிறப்பாக காணப்படும்.

new industrial countries

இந்த புதிய கைத்தொழில் மயமாக்க நாடுகளின் கைத்தொழில் விருத்தியில் செல்வாக்கு செலுத்தும் காரணிகளினை அவதானிக்குமிடத்து அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் கைத்தொழில் கொள்கை காணப்படல், தாராளமயமான பொருளாதார கொள்கை, மக்களின் இன மத ரீதியான ஒற்றுமை, தனியார் கைத்தொழில் முதலீடுகளுக்காக அரசு குறைந்த வட்டி வீதத்தில் அதிக கடன்களை வழங்குதல், தொழில்நுட்பம் சார்ந்த கல்வி விருத்தி, புதிய இயந்திர சாதனங்களின் வருகை, ஏற்றுமதி ஊக்குவிப்பு அதிகரித்தல், மக்களினை கவரும் வகையில் புதிய பொருட்களினை வடிவமைத்தல், சிறந்த தொழிலாளர்கள், நவீனத்துவதுடன் கூடிய நகராக்க விருத்திகள், சிறந்த போக்குவரத்து விருத்தி மற்றும் சந்தை வாய்ப்பு போன்றனவற்றினை குறிப்பிட்டு கொள்ளலாம். 

இந்த புதிய  கைத்தொழில் மயமாக்க நாடுகள்  பொதுவாக விவசாயம் சார்ந்த  உற்பத்திகள்,   ஆடை உற்பத்தி, மருந்து உற்பத்தி, இலத்திரனியல் சார் உற்பத்திகள், அகழ்வு தொடர்பானவை, தொழில்நுட்பம் போறவற்றினை அடிப்படையாக கொண்டு உற்பத்தியினை மேற்கொள்கின்றன. இதனால் இந்த நாடுகளின் பொருளாதாரமும் அபிவிருத்தியும் முன்னோக்கி செல்கின்றது எனலாம். 

Monday, March 22, 2021

மன்னார் வளைகுடாவின் உயிர்ப்பல்வகைமை

 மன்னார் வளைகுடா தூத்துக்குடியில் இருந்து இராமேஸ்வரம் தீவு வரை விரிவடைந்து தென்மேற்கு- வடகிழக்கு திசையில் அமைந்துள்ளது. இதன் நீளம் 140 கிலோமீட்டர்கள் ஆகும்.  இந்த மன்னார் வளைகுடாவில் கரையோரத்துக்கு சாமந்தரமாக  21 தீவுகள்  காணப்படுகின்றன.அவை 0.25-125 சதுரகிலோமீட்டர் பரப்பளவினை கொண்டுள்ளன. இதன் ஆழம் 1335 மீட்டர்கள் ஆகும். அத்துடன் இதன் பரப்பளவு 10500 சதுரகிலோமீட்டர்கள் ஆகும். 

இந்த மன்னார் வளைகுடா கடல்சார் உயிர்ப்பல்வகைமையின் புகலிடமாக காணப்படுகின்றது. 1980ம் ஆண்டு மன்னார் வளைகுடா தேசியபூங்கா தென்கிழக்காசிய பகுதியில் முதன்முதலாக உருவாக்கப்பட்டவை ஆகும். இந்த மன்னார் வளைகுடாவில் இந்தியபெருங்கடலில் முக்கியம் பெற்ற 4 பவளப்பாறைகள் காணப்படுகின்றன. இது அந்தமான் தீவுகள், நிக்கோபார் தீவுகள் , மன்னார் வளைகுடா , லட்ஷ தீவுகள் ஆகியவற்றில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

gulf of mannar

மன்னார் வளைகுடாவில் பல வகையான உயிர்ப்பல்வகைமை காணப்படுகின்றது. குறிப்பாக கடல்வாழ் உயிரினங்கள் 4223 உம், பவளப்பாறைகள் 117 வகையும், கடல்புற்கள் 15 வகையும்,  சதுப்புநிலங்கள் 11 வகையும், முடத்தேலிகள் 100 வகையும், கடற்பசு ஒரு வகையும், கடற்பன்றி ஒரு வகையும், கணுக்காலிகள் 70 வகையும், சங்கு சிற்பிகள் 260 வகையும், கடற்பாசிகள் 181 வகையும், மீனினங்கள் 1147  வகையும், கடல் ஆமைகள் 5 வகையும், ஓங்கிகள் 14 வகையும், திமிங்கிலங்கள் 6 வகையும் காணப்படுகின்றன.

பவளப்பாறைகள் பற்றி அவதானிக்குமிடத்து அலைகளின் வேகத்தினை கட்டுப்படுத்தவும், மீனினங்களின் இருப்பிடமாவும் விளங்குகின்றது. இதில் அதிகளவான இனப்பெருக்க செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. கடற்பாசிகளில் கிரீஸிலேரியா என்ற சிறிய இனம் இராமேஸ்வரத்தில் காணப்படுகின்றது. இதில் அல்ஜின் என்ற மூலப்பொருள் உண்டு. இதுதவிர ஸர்காசம், டாபினேரியா போன்ற சிறிய இனங்களும் காணப்படுகின்றன. இந்த கடற்பாசிகள் உணவுக்காக பயன்படுத்தப்படும்.

gulf of mannar

நண்டு வகைகளினை அவதானிக்குமிடத்து இங்கு நீலக்கால் நண்டு , முக்கண்ணன் நண்டு, சிலுவை நண்டு, கழி நண்டு ஆகியன காணப்படுகின்றன. இதில் நீலக்கால் நண்டு, முக்கண்ணன் நண்டு ஆகியன அதிகமாக காணப்படுகின்றது. இங்குள்ள நண்டுகளினை தூத்துக்குடி வாழ் மக்கள் பிடிக்கின்றனர். இதில் கழி நண்டு தென்கிழக்காசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

கடலாமைகள் பற்றி பார்க்கின்றபோது உலகில் 7 வகையான கடலமைகள் உண்டு. அதில் 5 வகையான கடலாமைகள் இந்த மன்னார் வளைகுடாவில் காணப்படுகின்றது. இங்கு சித்தாமை, அழுங்காமை, பச்சை ஆமை, பெருந்தலை ஆமை, தோணி ஆமை போன்றன காணப்படுகின்றன. இவை முட்டை இட்டு குஞ்சு பொரிக்கும். இந்த கடலாமைகள் சொறி மீனினங்களை வேட்டையாடும் தன்மை கொண்டவை. அத்துடன் இங்கு டுகாங் என்ற வகையான கடற்பசு காணப்படுகிறது. இவை பழுப்பு நிறத்தினை கொண்டிருப்பதோடு 500 கிலோகிராம் எடையினையும் கொண்டுள்ளது.

மன்னார் வளைகுடாவில் 290 வகையான பறவைகள் காணப்படுகின்றன. இதில் பூநாரை, செங்கால் நாரை, கரண்டிலாயன், தத்தை, கொத்தி நாரை, நெடுங்கால் நாரை, கூழை  கடா, வெள்ளை அரிவாள் மூக்கன், ஆலா, கடற்புறா, கறுப்பு அரிவாள் மூக்கன் ஆகியன முக்கியம் பெற்ற பறவை இனங்களாக காணப்படுகின்றன. இதுதவிர 1147 வகையான மீனினங்கள், 428 வகையான மெல்லுடலிகள் , 112 வகையான நட்சத்திர மீனினங்களும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Sunday, March 21, 2021

புவிநடுக்கம்

 புவிநடுக்கமானது மிக ஆழத்தில் உருவாகும் தன்மை கொண்டது. தகடுகளின் ஒன்றுக்கு ஒன்றான நகர்வுகள் காரணமாக புவிநடுக்கம் ஏற்படுகின்றது. புவியோட்டின் கீழ் அகவிசை தொழிற்பாட்டினால் தோன்றும் அலைகள் புவியோட்டின் ஒரு பகுதியை நடுக்கத்துக்கு உள்ளாக்குகின்றது. இதனை புவிநடுக்கம் என அழைப்பார்கள். இதில் குவிவு மையம், மேன்மையம் என 2 பகுதிகள் உண்டு. குவிவுமையம் 70 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்து காணப்படும். உலகில் ஒவ்வொரு 2 1/2 மணித்தியாலத்துக்கும் 1 புவிநடுக்கம் ஏற்படுகின்றது. ஒவ்வொரு வருடமும் 40 நடுத்தர புவிநடுக்கமும், 40-50 வரையான சிறிய புவிநடுக்கமும் ஏற்படுகின்றது. இந்த புவிநடுக்கத்தினை அளக்கும் அளவுத்திட்டம் ரிக்டர் ஆகும்.இதனை மேற்காலி என்பவர் கண்டறிந்தார்.

புவிநடுக்கத்தினை ஏற்படுத்தும் காரணிகள் பற்றி அவதானிக்குமிடத்து தகடுகளின் அசைவு காணப்படுகின்றது. புவியில் பல்வேறு வகையான சிறிய மற்றும் பெரிய கவச தகடுகள் காணப்படுகின்றது. இவை மோதுகின்றபோது அதிர்வுக்கு உள்ளாகி புவிநடுக்கம் ஏற்படுகின்றது. குறிப்பாக 1993ம் ஆண்டு இந்தியாவில் மாராஷ்ராவில் ஏற்பட்ட புவிநடுக்கமானது இந்திய தகடு மற்றும் யுரேசியன் தகடுகள் நகர்ந்ததால் ஏற்பட்டதாகும். 2004ம் ஆண்டு இந்தோனேசியாவில் ஏற்பட்ட புவிநடுக்கமானது பர்மா தகடு மற்றும் இந்தியத்தகடு நகர்ந்தமையால் ஆகும்.

புவிநடுக்கம்

எரிமலை செயற்பாடுகள்- தகடுகளின் விலகல் செயற்பாடுகள் காரணமாக புவியின் உட்புறத்திலுள்ள பாறைக்குழம்பு அகவிசை தொழிற்பாட்டினால் உந்தப்பட்டு வெளித்தள்ளப்படுகின்றது. இதனால் எரிமலை வெடிப்பு ஏற்படுகின்றது. இந்த அதிர்வின் காரணமாக புவிநடுக்கமானது குறித்த பகுதியில் ஏற்பட வழிவகுக்கின்றது. 1975ம் ஆண்டு கவாயில் உள்ள கிலேயுலா எரிமலை கக்குகையினால் 6.9 ரிக்டர் அளவுக்கு புவிநடுக்கம் உருவாகியது. 1981ம் ஆண்டு சென் கெனஸ் எரிமலை கக்குகையினால் 5.5 ரிக்டர் அளவில் புவிநடுக்கம் ஏற்பட்டது.

புவிநடுக்கம் ஏற்படுகின்ற பகுதிகளில் குடியிருப்புக்களினை அமைத்தல்- இன்று அதிகரித்து வரும் சனத்தொகைக்கு ஏற்ப மக்கள் எல்லா இடங்களிலும் குடியிருப்புக்களினை அமைத்து கொள்கிறார்கள். இந்த குடியிருப்புக்களை புவிநடுக்க வலய பகுதிகளில் அமைக்கும் பொருட்டு காலப்போக்கில் கட்டடங்களின் அதிர்வினால் புவிநடுக்கம் தோற்றம் பெறுகின்றது.

அகழ்வு நடவடிக்கைகளினை மேற்கொள்ளுதல்- அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் வேறு தேவைகள் காரணமாக மக்கள் நிலத்தினை குடைந்து அதில் அகழ்வு கைத்தொழில்களினை மேற்கொள்கின்றனர். இந்த அகழ்வு காரணமாக பாறைப்படைத்தளங்கள் அதிர்வு நிலைக்கு உள்ளாகி புவிநடுக்கத்தினை தோற்றுவிக்கின்றது. குறிப்பாக இலங்கையில் இரத்தினக்கல் அகழ்வு, இந்தியா மற்றும் சீனாவில் நிலக்கரி அகழ்வு , தென்னாபிரிக்காவில் தங்க அகழ்வு போன்றவற்றினை கூறிக்கொள்ளலாம்.

புவிநடுக்கம்

கடலுக்கடியில் மேற்கொள்ளப்படுகின்ற அணுஆயுத பரிசோதனைகள்- இன்றைய வளர்ந்து வரும் உலகில்  அணுஆயுதங்கள்,ஏவுகணைகள் போன்றன கடலினை அடிப்படையாக கொண்டு ஏற்படுகின்றன. அத்துடன் அணுஆயுதங்களினையும் அணுகுண்டுகளினையும் கடலுக்கடியில் வெடிக்க செய்கின்றனர். இந்த அதிர்வின் காரணமாக புவிநடுக்கம் ஏற்படுகின்றது. குற்பியாக ரஷ்யா, ஐக்கிய ராச்சியம், பிரான்ஸ், சீனா, இந்தியா ,  பாகிஸ்தான்,வட கொரியா, ஈரான், ஈராக் ஆகிய நாடுகள் அணுஆயுத உற்பத்தியில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Saturday, March 20, 2021

கெப்பனின் மத்தியதரை காலநிலை

 கெப்பனின் காலநிலை பகுப்பில் சூடான இடைவெப்ப மழை காலநிலை c காலநிலை என அடையாளம் செய்யப்பட்டுள்ளது. இந்த c காலநிலையில் cs காலநிலை வறண்ட கோடையையும் மாரி மழையையும் கொண்ட உப காலநிலை பிரிவாக  காணப்படுகின்றது.cs காலநிலை மேலும் csa  மாரிமழை கடும்வெப்ப கோடை எனவும் cse மாரி மழை குளிர்ச்சியான கோடை என நுண் பிரிவுகளினை  கொண்டுள்ளது.

cs காலநிலை மத்தியதரை கடற்பகுதியை சூழ்ந்து காணப்படுவதால் அதனை மத்தியதரை காலநிலை என அழைப்பார்கள்.  இவை பொதுவாக கண்ட நில மேற்கு கரைப்பகுதிகளில் மத்திய தரைக்கடலுக்கு வெளியில் அமைந்துள்ளமையினை காணலாம். அகல கோட்டு அடிப்படையில் இதன் இடஅமைவு 30-45 பாகைக்கு இடையில் பெரும்பாலும் அமைந்துள்ளது. கண்ட அடிப்படையில் இடஅமைவை நோக்கும்போது தென் ஐரோப்பாவின் தெற்கு எல்லைப்பகுதியும் ஆபிரிக்காவின் நிலப்பகுதியும் உள்ளடங்கி இருக்கும். 

கெப்பனின் மத்தியதரை காலநிலை

இந்த காலநிலையில் போத்துக்கல், தென் பிரான்ஸ், தென் ஸ்பெயின், இத்தாலி, குரைஷியா, பொன்சியா, யூக்கோசொலவாக்கியா, அல்பேனியா, கிரீஸ், மாசிடோனியா, பல்கேரியா ஆகிய ஐரோப்பிய  நாடுகளும், ஆபிரிக்காவில் மொராக்கோ, அல்ஜீரியா, துனிசியா மற்றும் ஒடுங்கிய கடற்கரை போன்றனவும் ஆசியாவில் மத்தியதரை, துருக்கி, சிரியா, இஸ்ரேல், ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான் போன்றனவும், காணப்படுகின்றது. மத்தியதரை கடலுக்கு வெளியே உள்ள பிரதேசங்களை அவதானிக்கும்போது வட அமெரிக்காவில் கலிபோர்னியா, வட மெக்சிக்கோ போன்றனவும், தென் அமெரிக்காவில் மத்திய சில்லியும், தென் ஆபிரிக்காவில் தென் பகுதியும், அவுஸ்ரேலியாவின் தென்மேற்கு கடற்கரையோரமும் அடிலெய்ட் பகுதியும் காணப்படுகின்றது.

கெப்பனின் மத்தியதரை காலநிலை

இங்குள்ள வெப்பநிலை தன்மைகளை அவதானிக்கும்போது வரட்சியான கோடை பருவ வெப்பநிலை காணப்படுகின்றது. இங்கு சராசரியாக 20-35 பாகை செல்ஸியஸ் வெப்பநிலை காணப்படுகின்றது. csa வெப்பமான கோடையாகவும் , cse இளஞ்சூடான கோடையாகவும் காணப்படுகின்றது. கோடையில் சூரியக்கதிர் வீசலின் அளவு அதிகரித்து காணப்படும். இதற்கு வெப்பநிலை பிரதான காரணமாக இருக்கிறது. மாரிகாலத்தில் சராசரி வெப்பநிலை 3-18 பாகை செல்ஸியஸ் ஆக காணப்படும்.

இயற்கை தாவரங்கள் பற்றி அவதானிக்கும்போது ஈரமான குளிர்ச்சியான உயர் நிலங்களில் அடர்த்தி குறைந்த காடுகள் காணப்படுகின்றது. சமவெளிகளிலும், பள்ளத்தாக்குகளிலும் புற்தரைகள் அதிகம் காணப்படுகின்றது. இவற்றுக்கு இடையே சில இடங்களில் உயரம் குறைந்த திறந்த காடுகள் காணப்படுகின்றன. இங்கு கோடை வறண்ட பருவம் என்பதால் தடித்த பட்டை கொண்ட நீண்ட வேர்களை கொண்ட தாவர இனங்கள் காணப்படுகின்றது. தாவரங்களின் இலைகள் மெழுகு போல தடித்த தன்மையினை கொண்டு காணப்படுகின்றது. கோடையில் ஆவியாகத்தை தடுக்க கூடிய இலைகள் இங்கு காணப்படுகின்றது. 

இங்குள்ள மண் வகையினை அவதானிக்கும்போது கடல்சார் மண் செழிமை அற்றதாகவும் மணல் வயல்களை அதிகம் கொண்டதாகவும் காணப்படுகின்றது. சமவெளிகளிலும், பள்ளத்தாக்குகளிலும் வண்டல் மண் அதிகமாக காணப்படுகின்றது. புல்வெளியை அண்டிய பகுதிகளில் கருமணல் காணப்படுகின்றது. 

Thursday, March 18, 2021

காட்டுத்தீயினை ஏற்படுத்தும் காரணிகள்

அதிகளவான வெப்பநிலை- இன்றைய உலகில் காலநிலை மாற்றத்தால் வெப்பநிலையானது அதிகரித்து  வருகின்றது. 19 நூற்றாண்டின் இறுதியில் பூகோள வெப்பநிலை 0.5 பாகை செல்ஸியஸ் இனால் அதிகரித்துள்ளது. 1950-1993களில் 0.75 பாகை செல்ஸியஸ் இனால் அதிகரித்தது. இன்றைய நிலையில் 1.4- 5.8 பாகை செல்ஸியஸ் இனால் அதிகரிக்கப்படலாம் என எதிர்வு கூறப்படுகின்றது. இந்த அதிகரித்த வெப்பநிலை காரணமாக காடுகள் தாமாகவே பற்றிக்கொள்கின்ற நிலை ஏற்படுகின்றது. இதனால் காட்டுத்தீ உருவாகின்றது. குறிப்பாக அமெரிக்காவில் 80% ஆன காட்டுத்தீ வெப்பநிலை அதிகரிப்பினால் தான் ஏற்படுகின்றது.

வரட்சி நிலை- அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக உலகில் வரட்சி நிலை உருவாகின்றது. இதன் காரணமாக அதிகளவிலான காட்டுத்தீ ஏற்படுகின்றது. குறிப்பாக 2014ம் ஆண்டு கலிபோர்னியாவில் வரட்சி காரணமாக காட்டுத்தீ ஏற்பட்டது. இதன் காரணமாக 2500 ஏக்கர் காடுகள் அழிவுற்றன. இதுமட்டுமில்லாது 2017ம் ஆண்டு மேற்கு அமெரிக்காவில் மெக்சிக்கோ பகுதியில் ஏற்பட்ட வரட்சி காரணமாக 3.3 மில்லியன் ஏக்கர் காடுகள் அழிவுற்றன.

காட்டுத்தீ

இடிமின்னல் தாக்கம்- மழை பெய்கின்ற காலங்களில் இடிமின்னல் தாக்கம் என்பது அனைத்து பிராந்தியங்களிலும் நிகழும் ஒரு சாதாரண நிகழ்வாகும். இதன்போது ஏற்படும் தீப்பொறிகள் காடுகளில் விழும்போது காடுகள் எரிவடைகின்றன. உலகில் 12% ஆன காட்டுத்தீ அனர்த்தம் இடிமின்னல் தாக்கத்தினால் ஏற்படுகின்றது. 2017ம் ஆண்டு கலிபோர்னியாவின் வென்டரா நகரில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் 4500 ஏக்கர் காடுகள் அழிவுற்றமை குறிப்பிடத்தக்கது.

மரங்களின் உராய்வு தன்மை- அதிக வரட்சி காரணமாக காற்றின் தீவிர தன்மை கூடுதலாக காணப்படும் வேளை மரங்கள் ஒன்றுடன் ஒன்று உராய்வதனால் நெருப்பு ஏற்படுகின்றது. குறிப்பாக இந்த சூழ்நிலையினால் மூங்கில் மரங்கள் உடனடியாக உராய்வினால் தீப்பற்ற தொடங்குகின்றன. இதனால் காடுகள் அழிவுறுகின்ற நிலை ஏற்படுகின்றது. 2008ம் ஆண்டு பிரேசிலில் ஏற்பட்ட காட்டுத்தீக்கு அடிப்படை காரணம் மூங்கில் மரங்களின் உராய்வு தன்மை  ஆகும்.

காட்டுத்தீ

நிலநடுக்கம்- உலகில் ஏற்படும் நிலநடுக்கங்கள் காரணமாக பல்வேறு விளைவுகள் ஏற்படுகின்றன. இதனால் காடுகளில் ஏதேனும் ஒரு காரணமாக தீ பற்றுகின்ற சந்தர்ப்பத்தில் காட்டுத்தீ ஏற்படும். குறிப்பாக 2017ம் ஆண்டு சன்றோ ரோசா என்ற இடத்தில் 4 ரிக்டர் அளவுத்திட்டத்தில் இடம்பெற்ற புவிநடுக்கம் காரணமாக அந்த பகுதியில் உள்ள காடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. இதனால் கலிபோர்னியாவில் 3061 வீடுகள் முற்றாக அழிவுற்றன.

யுத்த நடவடிக்கைகள்- இன்றைய உலகில் அதிகளவான கலவரங்கள் நாடுகள் மத்தியில் ஏற்படுகின்றது. இதனால் ஆயுததாரிகள் பயன்படுத்தும் குண்டுகள், செல்கள் ஆகியன காடுகளில் விழுகின்ற சந்தர்ப்பத்தில் காட்டுத்தீ ஏற்படுகின்றது. குறிப்பாக 2ம் உலக மகா யுத்தத்தின்போது தென்மேற்கு பெர்லினில் ஏற்பட்ட கலவரம் காரணமாக காட்டுத்தீ ஏற்பட்டது. இதன்போது 500 ஏக்கர் காடுகள் அழிவுற்றன. 

எரிமலை செயற்பாடுகள்- ஒரு பிரதேசத்தில் எரிமலை கக்குகை நிகழும் போது வெளித்தள்ளப்படும் லாவா குழம்பானது நகர்ந்து தாவரப்போர்வைகளினை தாக்குமிடத்து அங்கு வெப்பத்தின் காரணமாக காடுகள் அழிவுறுகின்றன. இவ் லாவா குழம்பானது 2000 பாகை பரனைட்  வெப்பநிலையினை கொண்டதாகும். 2018ம் ஆண்டு கவாய் எரிமலை கக்குகையின் காரணமாக காட்டுத்தீ ஏற்பட்டது. இதன் காரணமாக 104 ஏக்கர் காடுகள் அழிவுற்றன. அத்துடன் 26 வீடுகள் முற்றாக அழிவுற்றமை குறிப்பிடத்தக்கது.

Wednesday, March 17, 2021

வெள்ளப்பெருக்கிற்கான காரணிகள்

அதிகளவிலான மழைப்பொழிவு- திடீரென அதிகளவிலான மழை ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில் வெள்ளப்பெருக்கு அனர்த்தம் தோன்றுகின்றது. குறிப்பாக 2005ம் ஆண்டு மும்பையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்கு 5 மீட்டர் அளவிலான மழைவீழ்ச்சியே காரணமாகும். 2015ம் ஆண்டு சென்னையில் 483 மில்லிமீட்டர் மழைப்பொழிவினால் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 2016ம் ஆண்டு இலங்கையில் 350 மில்லிமீட்டர் மழைப்பொழிவினால் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதுதவிர 2018ம் ஆண்டு இலங்கையில் முல்லைத்தீவு , ஆகிய மாவட்டங்களில் 365 மில்லிமீட்டர் மழையினால் அதிகளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மற்றும் கடந்த வருடம் அதாவது நிவர் புயல், புரேவி புயல் காரணமாக இலங்கையின் கரையோர பகுதிகள் குறிப்பாக இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு ஆகியவற்றில் அதிகளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதுமட்டுமில்லாது இந்தியாவின் கரையோர பகுதிகளில் அதிகளவிலான வெள்ளப்பெருக்குகள் ஏற்பட்டது.
வெள்ளப்பெருக்கு

நதிகளில் நீர் நிரம்பி வழிதல்- நதிகளில் அதிகளவிலான நீர் தேங்குகின்ற சந்தர்ப்பத்தில் கொள்ளளவு அதிகரிக்கும்போது அவை வெள்ளமாக மாறுகின்றது. குறிப்பாக கங்கை நதி, யமுனை நதி ஆகியவற்றின் அதிக கொள்ளளவு காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றது. இதன் காரணமாக பங்களாதேஷில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றது. 

நீர்தேக்கங்களின்  உடைவு- நீர்த்தேக்கங்கள் அதிகளவு மனித நடவடிக்கைகள் காரணமாகவும் மழைப்பொழிவின் தீவிரத்தன்மை காரணமாகவும் உடைவு ஏற்படுகின்றது. இது வெள்ளப்பெருக்கினை தோற்றுவிக்கின்றன. 2011ம் ஆண்டு மிசூரிமிசிசிப்பி நதிகளின் தேக்கம் உடைந்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 3.98$ செலவு ஏற்பட்டது. 1972ம் ஆண்டு  வர்ஜீனியாவில் உள்ள கிரீக் பள்ளத்தாக்கு உடைவினால் அதிகளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
வெள்ளப்பெருக்கு

நகர்ப்புற வடிகால் அமைப்பு- மழைப்பொழிவு அதிகமாக நிகழும் சந்தர்ப்பத்தில் நகர்ப்புறங்களில் வடிகால் அமைப்புகளில் அளவுக்கதிகமான நீர்  தேங்குகின்றது. இதனால் கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புக்களின் இடையில் நீர் வழிந்தோட இடமில்லாமல் அவ்விடத்தில் அதிகளவிலான வெள்ளப்பெருக்கினை ஏற்படுத்துகின்றது. குறிப்பாக இதனை மும்பை, ஷாங்காய், நியூயோர்க் ஆகிய நகரங்களில் இதன் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றது.

புயல்கள் மற்றும் சுனாமி- அதிகளவிலான சூறாவளியினாலும், சுனாமியினாலும் அதிக நீர் கரையோரத்தினை தாக்குகின்றது. இதனால் வெள்ளப்பெருக்கானது கரையோர பகுதிகளில் நிகழ்கின்றது. 2004ம் ஆண்டு இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமி காரணமாககரைஒயர  கரையோர பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதுதவிர 2011ம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி காரணமாக கரையோர பகுதிகளில் அதிகளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

பனிப்படலங்கள் உருகுதல்- பூகோள வெப்பநிலை அதிகரிப்பின் காரணமாக முனைவு பகுதியில் உள்ள பனிப்படலங்கள் உருகுகின்றது. இதன்காரணமாக நதிகளின் கொள்ளளவு அதிகமாகி வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றது. குறிப்பாக இமாலயப்பகுதி பனிப்படலங்கள் உருகி கங்கை நதி, யமுனை நதி ஆகிய நதிக்கரையோரங்களில் கொள்ளளவு அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றது. 

Tuesday, March 16, 2021

உலக சனத்தொகை பரம்பலில் செல்வாக்கு செலுத்தும் காரணிகள்

 காலநிலை தன்மைகள்- ஒரு பிரதேசத்தில் மக்கள் வாழ வேண்டுமெனில் சிறப்பான காலநிலை என்பது அவசியமாகின்றது. குறிப்பாக அதிக  குளிர், அதிக வெப்பநிலை உள்ள பிரதேசத்தில் மக்கள் வசிக்க முடியாது. உலகினை பொறுத்தவரை அயன வலயம், இடைவெப்ப வலய பகுதிகளில் மக்கள் வாழ்வதற்கு ஏற்ப சாதகமான காலநிலை தன்மைகள் கிடைக்க பெறுகின்றது. இதனால் இந்த வலயங்களில் அதிகளவிலான மக்கள் வாழ்கின்றனர். 

சிறப்பான தரைத்தோற்றம்- மக்கள் வாழ்வதற்கும் தமது குடியிருப்புக்களினை அமைத்து கொள்வதற்கும் தரைத்தோற்றம் நன்கு திறம்பட அமைந்திருக்க வேண்டும். குறிப்பாக மலைப்பகுதிகள், சாய்வான தளங்கள் போன்றன மனிதன் வாழ்வதற்கு பொருத்தமான இடமாக  இல்லை.மாறாக சமதரை கொண்ட நிலப்பகுதிகளில் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். இதற்கு சிறந்த உதாரணமாக ஜப்பானின் டோக்கியோ, சீனாவின் பீஜிங், இந்தியாவின் டெல்கி, அமெரிக்காவின் வொஷிங்டன் போறவற்றினை கூறிக்கொள்ளலாம்.

உலக சனத்தொகை

இயற்கை அனர்த்தங்கள் அற்ற பகுதிகள்- மக்கள் வாழ்வதற்கு சிறப்பான சூழல் அவசியமாகின்றது. குறிப்பாக இயற்கை அனர்த்தங்களான புவிநடுக்கம், எரிமலை கக்குகை, சுனாமி போன்றன நிகழும் பகுதிகளில் மக்களின் குடியிருப்புக்கள் அமைக்கப்பட மாட்டாது. மாறாக இயற்கை அனர்த்தங்களின் அளவு குறைந்த பகுதிகளில் அதிகவிலான மக்கள் வாழ்கின்ற சூழ்நிலை உருவாகும்.

நகராக்கம் நிறைந்த இடங்கள்- இன்றைய உலகினை பொறுத்தவரை நகர்ப்பகுதிகள் அனைத்து தேவைகளையும், சேவைகளையும் வழங்குகின்ற ஒன்றாக காணப்படுகின்றது. குறிப்பாக 2018ம் ஆண்டு தரவின்படி 53.5% மக்கள் நகர பகுதிகளில் வாழ்கின்றனர். இது 2050களில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 2020ம் ஆண்டு தரவுகளின் படி உலகின் தலைசிறந்த நகராக்கம் இடம்பெறும் பகுதிகளாக வத்திக்கான், ஜிப்ரால்டர், நவ்ரூ, பெர்முடா, கொங்ஹொங், மொனாகோ, அங்குவாலா, லக்ஸம்பேர்க், சிங்கப்பூர், கட்டார் ஆகியன காணப்படுகின்றன.

உலக சனத்தொகை

சிறந்த பொருளாதார விருத்தி- ஒரு நாட்டில் மனிதன் தன்னிறைவாக வாழ்வதற்கு பொருளாதாரம் முக்கியமானதாகும். எப்பகுதியில் சிறப்பான பொருளாதாரம் காணப்படுகின்றதோ அந்த பகுதியில்  அதிகளவிலான மக்கள் குடியேறுவார்கள். குறிப்பாக உலகின் சிறந்த பொருளாதாரத்தினை கொண்ட நாடுகளினை நாம் அவதானிக்கும்போது அமெரிக்கா,  சீனா, ஜப்பான், ஜேர்மனி, ஐக்கிய ராச்சியம், பிரான்ஸ், இந்தியா, இத்தாலி, பிரேசில், கனடா ஆகியன காணப்படுகின்றன.

சிறப்பான கல்வி நடவடிக்கைகள்- ஒரு நாட்டின் அதிகளவு சனத்தொகை பரம்பல் இருக்க வேண்டுமாயின் அந்த நாட்டில் சிறப்பான கல்வி நடவடிக்கைகள் செவ்வனே அமைந்திருக்க வேண்டும். அதாவது வேறு நாடுகளில் இருந்தும் மக்கள் இடம்பெயர்ந்து கல்விற்காக வாழ்கின்ற நிலை காணப்படுகின்றது. இன்று உலகில் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக ஒஸ்போர்ட் பல்கலைக்கழகம், கேம்பிரிஜ் பல்கலைக்கழகம் போறவற்றினை கூறிக்கொள்ளலாம். 

சிறந்த சுகாதார வசதிகள்- உலக மக்கள் சிறப்பாகவும் ஆரோக்கியமாகவும் வாழ்வதற்கு சிறந்த சுகாதாரம் முக்கியம் பெற்ற ஒன்றாக காணப்டுகின்றது. ஒரு குழந்தை பிறப்பு முதல் அனைத்து விடயத்துக்கும்   சுகாதாரம்,மருத்துவம் முக்கியமாகின்றது. இந்த சுகாதாரவசதி சிறப்பாக இருக்கும் சந்தர்ப்பத்தில் அந்த பகுதியில் அதிகளவிலான மக்கள் ஒருங்குவார்கள். 2020ம் ஆண்டு தரவுகளின்படி சிறந்த சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்தினை கொண்டுள்ள நாடுகளாக ஸ்பெயின், இத்தாலி,  ஐஸ்லாந்து,  ஜப்பான் , சுவிஸ்லாந்து, சுவீடன், அவுஸ்ரேலியா, சிங்கப்பூர் ஆகியன காணப்படுகின்றன. 

Monday, March 15, 2021

ஆற்றின் சுமை கொண்டுசெல்லப்படும் முறைகள்

 ஆற்றினுடைய சுமை கொண்டுசெல்லப்படும் முறைகளை பிரதானமாக 4 பெரும் பிரிவாக பாகுபாடு செய்து கொள்ளலாம். அவையாவன ஏற்றுதல்/ தெத்துதல், காவுதல், கரைசல், உருட்டுதல் போன்றனவாகும். ஏற்றுதல்/ தெற்றுதல் என்பது மிக பிரதானமோர் அம்சமாக  காணப்படுகின்றது.ஆற்றினால் அரித்து கொண்டுவரப்படும் பருப்பொருட்களில் மிக மிக பாரம் குன்றிய நுண்ணிய பருப்பொருட்களை தன்வசம் மேற்பரப்பினூடாக நகர்த்துகின்றபோது அதனை ஏற்றுதல், செயன்முறை என்று அழைப்பார்கள். இதன்போது மிக நுண்ணிய மணற்கற்கள்,  பாறைகள், தூசிகள் போன்றவற்றினை எடுத்துச்செல்வதனை அவதானிக்கலாம். 

River processing

முதலாவது நிலையின்போது கொண்டு செல்லப்பட்ட பருப்பொருட்களின் அளவினை விட ஓரளவு திணிவு கூடிய பருப்பொருட்களின்  அளவினை விட ஓரளவு பாரம் கூடிய பருப்பொருட்கள் காவுதல் செயன்முறையின்போது நிகழும். இதன்போது  சிறுபரல்கள் நகரும்.

பாறைப்படைத்தளங்களில் காணப்படுகின்ற கல்சியம் போன்ற கனிமங்களை ஆறானது கரைத்து வருகின்றபோது அதனை கரைசல் என அழைப்பார்கள். அதேவேளை அந்த சந்தர்ப்பத்தில் கொண்டுவரப்பட்ட பருப்பொருட்களோடு மேலும் ஏற்றுதல், மற்றும் காவுதல் போன்றவற்றின்முலம் கொண்டுவரப்பட்ட பருப்பொருட்களின் திணிவினை விட பாரம் கூடிய, குறிப்பாக மணற்கல், உள்ளிட்ட பதார்த்தங்களை கொண்டுசெல்லும் தன்மை கொண்டது.

River processing

மேற்கூறப்பட்ட செயன்முறைகளின் மூலம் எடுத்து செல்லமுடியாத பாரம் கூடிய பருப்பொருட்களை நதியானது அடிப்பரப்பினூடாக எடுத்துச்செல்கின்றபோது அதனையே உருட்டுதல் என அழைத்து கொள்ளுவார்கள்.  

Sunday, March 14, 2021

ஓடும் நீரின் தின்னல் செயற்பாடுகள்

 பூகோள பரப்பிலே ஓடும்நீர், பனிக்கட்டியாறு, கடலலை, காற்று, தரைக்கீழ்நீர் என பலதரப்பட்ட புறவிசை காரணிகள் காணப்படுகின்றபோது அவற்றில் பனிக்கட்டியாறு முனைவு பகுதியில் காணப்பட கடலையானது கடற்கரையில் காணப்பட, காற்று பாலைவனத்திலும், தரைக்கீழ் நீர் சுண்ணக்கல் வளமுடைய பிரதேசத்தில் பரந்துள்ளது. 

ஆனால் மாறாக ஓடும் நீரானது சிற்சில தனித்துவமான பிரதேசங்கள் தவிர உலகின் அனைத்து பகுதிகளிலும் குறிப்பாக அயனவலயம், முனைவு வலயம், இடைவெப்ப வலயம் பின்றவற்றில் வியாபித்து தனது தின்னல் செயற்பாட்டினை மேற்கொண்டு வருகின்றது. அதன் காரணமாக மேற்பரப்பு பிராந்தியத்தில்  பல்வேறுபட்ட விதமான நிலவுருவங்களை தோற்றுவித்த காரணத்தினால் இதனை ''சாதாரண தின்னல் நிலவுருவம்'' என அழைத்துக்கொள்ளுவார்கள்.

ஓடும் நீரின் தின்னல் செயற்பாடுகள்

ஓடும் நீரினுடைய தின்னல் செயற்பாடுகளை பிரதானமாக நான்கு வகையாக வகைப்படுத்தி கொள்ளலாம். அவையாவன நீரியற்  தாக்கம், அரித்தல் அல்லது தேய்தல், கரைசல், அரைந்து தேய்தல் போன்றனவாகும். அவற்றினை நாங்கள் விரிவாக பார்க்குமிடத்து ஆரம்ப நிலை ஓட்டத்தின்போது மலைப்பாங்கான பிரதேசங்களில் இருந்து நதியானது நகர்ந்து வருகையில் கொண்டுவருகின்ற பருப்பொருட்களினுடைய அளவு மிக குறைவாக காணப்படுவதனால் ஆற்றின் வேகம் அபரிவிதமான போக்கில் நகர்ந்து வரும். அங்கு அந்த நீரின் தாக்கத்தினால் வெடிப்புக்கள் ஏற்படுத்தப்படும் பொது அதனை நீரியற் தாக்கம் என அழைப்பார்கள்.

நதி நகர்ந்து வரும் போது பள்ளத்தாக்கினுடைய இரு மருங்கிலும் மிருதுவான சுரண்டலை ஏற்படுத்தி கொண்டுவரும்போது அதனையே அரித்தல் செயன்முறை என அழைப்பார்கள். 

ஓடும் நீரின் தின்னல் செயற்பாடுகள்

பாறைப்படைத்தளங்கள் ஊடாக ஆறானது நகர்ந்து வருகின்ற போது அங்குள்ள கல்சியம் போன்ற பல்வேறு கனிமங்களை கரைநத்து கொண்டு வருகையில் அந்த செயன்முறையினை கரைசல் செயற்பாடு என அழைத்துக்கொள்ளுவார்கள்.

நீரியல் தாக்கம், கரைசல் போன்ற செயன்முறைகளின் பிரகாரம் கொண்டுவரப்பட்ட பருப்பொருட்களை நதியானது தன் போக்கில் நகர்த்துகின்ற போது தன்னோடும் தன்னுடைய தளத்தோடும் அரைந்து தேய்த்து கொண்டு செல்கின்றபோது அதனையே அரைந்து தேய்தல் என அழைத்துக்கொள்ளுவார்கள். 

Friday, March 12, 2021

வளர்முகநாடுகளில் சனத்தொகை அதிகரிப்பினால் ஏற்படும் விளைவுகள்

 மக்களிற்கான வதிவிட பற்றாக்குறை- வளர்முக நாடுளில் சனத்தொகை அதிகரிப்பினால் அவர்களிற்கான இருப்பிடங்கள் குறைவாகவும், மக்கள் ஒரு பிரதேசத்தில் நெருக்கடியாக வாழவேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது. குறிப்பாக ஒரு கிலோமீட்டர் பரப்பில் 146 பேரும், பாகிஸ்தானில் 232 பேரும், பங்களாதேஷில் 1139 பேரும், இலங்கையில் 320 பேரும் வாழ்கின்றனர். இதனால் எதிர்காலங்களிலும் சரி இன்றும் சரி மக்களிற்கான வதிவிட பற்றாக்குறை ஏற்றப்படுகின்றது.

காடழிப்பு ஏற்படுகின்றது- அதிகரித்து வரும் சனத்தொகைக்கு ஏற்ப குடியிருப்புக்களினை அமைக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது. இதனால் அதிகளவிலான காடுகளினை அழிக்கின்றனர். இக்காடுகள் அழிப்பினால் சூழல் ரீதியான பிரச்சனைகள் ஏற்படுவதோடு புவி வெப்பமடைதல் பிரச்னையும் உருவாகின்றது. குறிப்பாக இந்தியாவில் 1900- 2000 ஆண்டுவரை 677701000 ஹெக்டேயர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதுடன் வருடாந்தம் 361500 ஹெக்டேயர் காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றது. இதுதவிர கொங்கோவில் வருடாந்தம் 500 சதுரகிலோமீட்டர் பரப்பு காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றது.

சனத்தொகை

வேலையில்லா பிரச்சனை- அதிகரித்து வரும் சனத்தொகைக்கு ஏற்ப ஒரு நாட்டில் அனைத்து மக்களுக்கும் வேலைவாய்ப்பினை வழங்கமுடியாத சூழ்நிலை ஏற்படுகின்றது. இதனால் அதிகளவிலான கல்வி கற்ற மக்களும் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக இந்தியாவில் 2017ம் ஆண்டு 18.3 மில்லியன் மக்களும், 2018ம் ஆண்டு 18.6 மில்லியன் மக்களும், 2019ம் ஆண்டு 18.69 மில்லியன் மக்களும் வேலையில்லா பிரச்சனை காரணமாக அவதிப்படுகின்றனர். 

வறுமை நிலை உண்டாகும்- அதிகரித்து வரும் சனத்தொகைக்கு ஏற்ப மக்களிற்கு போதுமான வேலைவாய்ப்பு இல்லாமல்  போகின்றது. அத்துடன் மக்கள் தமது தேவைகளையும், சேவைகளையும் பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகின்றது. இதனால் வறுமைநிலை ஏற்படுகின்றது. குறிப்பாக ஆசியாவில் 135.8 மில்லியன் மக்களும், ஆபிரிக்காவில் 422.2 மில்லியன் மக்களும், தென் அமெரிக்காவில் 17 மில்லியன் மக்களும் வறுமையினால் பாதிக்கப்படுகின்றனர். உலகளாவிய ரீதியில் 88 நாடுகள் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மாத்திரம் 640 மாவட்டங்கள் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சனத்தொகை

உணவு நெருக்கடி ஏற்படுகின்றது- வளர்முக நாடுகளினை பொறுத்தவரை சனத்தொகை அதிகரிப்பினால் மக்களிற்கு போதுமான அளவு உணவு கிடைக்க பெறாத நிலை ஏற்படுகின்றது. அத்துடன் விவசாய நிலங்களும் துண்டாடப்படுகின்றது. இதனால்  பஞ்சம், பசி, பட்டினி போன்றன ஏற்படுகின்றன. குறிப்பாக எதியோப்பியாவில் 8 மில்லியன் மக்களும், எதித்ரியாவில் 1.3 மில்லியன் மக்களும், ஆப்கானிஸ்தானில் 2.5 மில்லியன் மக்களும், இந்தியாவில் 130 மில்லியன் மக்களும் உணவு பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

Thursday, March 11, 2021

இலங்கையின் சனத்தொகை

 இலங்கையினை பொறுத்தவரை ஒரு அபிவிருத்தி  அடைந்து வரும் நாடாகும். இலங்கையில் சனத்தொகை பற்றி அவதானிக்குமிடத்து 2021ம் ஆண்டு தரவின்படி 21.47 மில்லியன் ஆக காணப்படுகின்றது. இதுதவிர முன்னைய ஆண்டுகளின் சனத்தொகை பற்றி பார்க்குமிடத்து 1959ம் ஆண்டு 9.64 மில்லியன் சனத்தொகையும், 1973ம் ஆண்டு 13.2 மில்லியன் சனத்தொகையும், 2007ம் ஆண்டு 19.8 மில்லியன் சனத்தொகையும், 2014ம் ஆண்டு 20.78 மில்லியன் சனத்தொகையும், 2015ம் ஆண்டு 20.9 மில்லியன் ஆகவும், 2016ம் ஆண்டு 21.02 மில்லியன் ஆகவும், 2017ம் ஆண்டு 21.1 மில்லியன் ஆகவும், 2018ம் ஆண்டு 21.2 மில்லியன் ஆகவும், 2019ம் ஆண்டு 21.3 மில்லியன் ஆகவும், 2020ம் ஆண்டு 21.4 மில்லியன் ஆகவும் காணப்பட்டது.

இலங்கையின்  சனத்தொகை

மற்றும் இலங்கையின் சனத்தொகை அதிகரிப்பு வீதத்தினை அவதானிக்குமிடத்து 1965ம் ஆண்டு 2.4% ஆகவும், 1975ம் ஆண்டு 1.88% ஆகவும், 1983ம் ஆண்டு 1.44% ஆகவும், 1996ம் ஆண்டு 0.68% ஆகவும், 2003ம் ஆண்டு 0.85% ஆகவும், 2009ம் ஆண்டு 0.7% ஆகவும், 2015ம் ஆண்டு 0.57% ஆகவும், 2018ம் ஆண்டு 0.48% ஆகவும், 2019ம் ஆண்டு 0.45% ஆகவும், 2020ம் ஆண்டு 0.42% ஆகவும் காணப்பட்டது.

உலக சனத்தொகையில் இலங்கையின் பங்களிப்பு 0.27% ஆக காணப்படுகின்றது. அத்தோடு உலக சனத்தொகையில் இலங்கை 58 ஆவது இடத்தில்  காணப்படுகின்றது. இலங்கையில் ஒரு சதுரகிலோமீட்டர்க்கு 341 பேர் வசிக்கின்றனர். அத்துடன் இலங்கையில் நகர சனத்தொகை 18.4% ஆகவும் காணப்படுகின்றது. 

இலங்கையின்  சனத்தொகை

இலங்கையில் எதிர்கால சனத்தொகையினை அவதானிக்குமிடத்து 2025ம் ஆண்டு 21.41 மில்லியன் ஆகவும், 2030ம் ஆண்டு 22 மில்லியன் ஆகவும், 2035ம் ஆண்டு 22.16 மில்லியன் சனத்தொகையும், 2040ம் ஆண்டு 22.18 மில்லியன் ஆகவும், 2045ம் ஆண்டு 22 மில்லியன் ஆகவும், 2050ம் ஆண்டு 21.8 மில்லியன் ஆகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதுதவிர இலங்கையில் அதிகளவு சனத்தொகை கொண்ட நகரங்களை அவதானிக்குமிடத்து 2021ம் ஆண்டு தரவின்படி கொழும்பு, தெஹிவளை - கல்கிசை, மொறட்டுவை, யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிட்ட கொட்ட, ஸ்ரீ ஜெயவர்த்தனபுர, கண்டி, திருகோணமலை, கல்முனை ஆகிய நகரங்கள் காணப்படுகின்றன.

Wednesday, March 10, 2021

உலக சனத்தொகை

 உலகமானது மக்களின் தொகையினாலும் அவர்களினுடைய செயற்பாடுகளின் காரணமாகவும் இயங்குகின்றது. மக்கள் தொகை இல்லையெனில் இன்று உலகம் இல்லை என்றே தான்  கூறலாம்.அதாவது ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் குறிப்பிட்டதொரு காலப்பகுதியில் மக்கள் தொகை திரண்டு இருக்கும் தன்மையை சனத்தொகை என அழைத்துக்கொள்ளுவார்கள். இன்றைய உலகின் சனத்தொகையினை அவதானிக்கும்போது 2021ம் ஆண்டு தரவின்படி 7.87 பில்லியன் ஆகும். இதுதவிர 1975ம் ஆண்டு 4.079 பில்லியன் சனத்தொகையும், 1995ம் ஆண்டு 5.744 பில்லியன் சனத்தொகையும், 2005ம் ஆண்டு 6.541 பில்லியன் சனத்தொகையும்,2010ம் ஆண்டு 6.956 பில்லியன் சனத்தொகையும், 2015ம் ஆண்டு 7.379 பில்லியன் சனத்தொகையும், 2019ம் ஆண்டு 7.713 பில்லியன் சனத்தொகையும், 2020ம் ஆண்டு 7.79 பில்லியன்  சனத்தொகையாகவும் காணப்பட்டது.

உலக ரீதியான இந்த சனத்தொகையின் எதிர்கால கணிப்பினை அவதானிக்குமிடத்து 2020ம் ஆண்டு 7.794 பில்லியன்  ஆகவும்,2025ம் ஆண்டு 8.184 பில்லியன் ஆகவும், 2030ம் ஆண்டு 8.548 பில்லியன் சனத்தொகையும், 2035ம் ஆண்டு 8.887 பில்லியன் சனத்தொகையும், 2040ம் ஆண்டு 9.198 பில்லியன் சனத்தொகையும், 2045ம் ஆண்டு 9.481 பில்லியன் சனத்தொகையும், 2050ம் ஆண்டு 9.735 பில்லியன் ஆகவும் சனத்தொகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உலக சனத்தொகை

சனத்தொகையினை கண்ட ரீதியாக அவதானிக்கும்போது ஆசியா கண்டத்தில் 4.64 பில்லியன்  சனத்தொகையும், ஆபிரிக்கா கண்டத்தில் 1.34 பில்லியன் சனத்தொகையும், ஐரோப்பாவில் 747 மில்லியன் சனத்தொகையும், தென் அமெரிக்காவில் 653 மில்லியன் சனத்தொகையும், வட அமெரிக்காவில் 368.8 மில்லியன் சனத்தொகையும் , ஓசானியாவில் 42 மில்லியன் சனத்தொகையும் காணப்படுகின்றது.

உலக சனத்தொகையின் வளர்ச்சி போக்கினை அவதானிக்கும்போது 1991ம் ஆண்டு 1.63% ஆகவும், 1994ம் ஆண்டு 1.46% ஆகவும், 1999ம் ஆண்டு 1.33% ஆகவும், 2004ம் ஆண்டு 1.25% ஆகவும், 2010ம் ஆண்டு 1.22% ஆகவும், 2015ம் ஆண்டு 1.16% ஆகவும், 2019ம் ஆண்டு 1.10% ஆகவும், 2020ம் ஆண்டு 1.05% ஆகவும் காணப்படுகின்றது.

உலக சனத்தொகை

உலகினுடைய சனத்தொகை அளவுகளினை அடிப்படையாக கொண்டு 3 வகையாக பாகுபடுத்தப்படுகின்றது. அவையாவன அதிகூடிய சனத்தொகை  பகுதிகள்(தென்னாசியா, கிழக்காசியா, தென்கிழக்காசியா, மேற்கு ஐரோப்பா), நடுத்தர அளவு கொண்ட பகுதிகள்(வட அமெரிக்கா, தென் அமெரிக்கா,  ஆசியாவின் மேற்கு கரை, ஐரோப்பாவின் வடக்கு கரை, கிழக்கு ஆபிரிக்கா, தென் கிழக்கு ஆபிரிக்கா), குறைந்த சனத்தொகை கொண்ட பகுதிகள்(ஒரிஸா, சகாரா, அட்டகாமா, பற்றகோனியா, கோபி, கிரீன்லாந்து, வட  துருவம், தென் துருவம்) போன்றனவாகும்.  

Tuesday, March 9, 2021

கடலலையினால் உருவாகும் படிதல் நிலவுருவங்கள்

 கடலலையினுடைய செயற்பாட்டினால் பல்வேறுபட்ட விதமான தின்னல் நிலவுருவம்  தோற்றம் பெறுகின்ற அதேவேளை அந்த தின்னல் செயன்முறையினால் கொண்டு வரப்படும் பருப்பொருட்கள் படியவிடப்படும் போது தோற்றம் பெறுகின்ற நிலவுருவங்கள் படிதல் நிலவுருவங்கள் ஆகும். அவையாவன கடற்கரை நீங்கு மணற்தடை, குடாத்தடை , கூழாங்கல் நாக்கு போன்றனவாகும். 

கடற்கரை நீங்கு மணற்தடை- கடற்பிரதேசங்களில் காணப்படுகின்ற மணல்,  சிறுபரல்கள், சிற்பி, சோகி போன்ற பருப்பொருட்கள் கரையோர பிரதேசங்களில் அலையின் தொழிற்பாடு காரணமாக எடுத்துவரப்பட்டு கொணர்ந்து படியவிடப்படுகின்றபோது அதனை  மணற்தடை என்று அழைத்துக்கொள்ளுவார்கள். காலப்போக்கில் அவ்வாறு படியவிடப்பட்ட மணற்தடைகள் அலையினுடைய வேகம் அதிகரிக்கின்றபோது அக்கரையோர பிரதேசங்களில் இருந்து நீக்கப்படுகையில் அதனையே கடற்கரை நீங்கு மணற்தடை என அழைப்பார்கள். 

கடலலையினால் உருவாகும் படிதல் நிலவுருவங்கள்

குடாத்தடை- கரையோர பிரதேசங்களில் மூன்று பக்கங்கள் நிலத்தினாலும், ஒரு பகுதி நீரினாலும் தொடுக்கப்பட்டு காணப்படும் நிலவுருவத்தினை குடா என அழைப்பார்கள். இக்குடாவின் வாய்ப்பகுதியில் கடலலையினால் அரித்துக் கொண்டுவரப்படுகின்ற மணல், சங்கு, சிற்பி, சோகி போன்ற பருப்பொருட்கள் கொண்டுவந்து படியவிடப்படுகின்றபோது அதனையே குடாத்தடை என அழைப்பார்கள். 

கடலலையினால் உருவாகும் படிதல் நிலவுருவங்கள்

கூழாங்கல் நாக்கு- அலைகளின் தொழிற்பாட்டினால் கொண்டு வரப்படுகின்ற மணல்,  மணற்கல், போன்றன கரையோர பிராந்தியங்களில் இருந்து கடலை நோக்கி நாக்கு வடிவம் போன்ற அமைப்பில் படியவிடப்படுகின்றபோது அதனை கூழாங்கல் நாக்கு என அழைத்துக்கொள்ளுவார்கள். 

Sunday, March 7, 2021

மண்ணரிப்பினால் ஏற்படும் பாதிப்புக்கள்

 விவசாய ரீதியான பாதிப்புக்கள்- மண்ணரிப்பு ஏற்படுவதனால் மண்ணானது ஒரு இடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு எடுத்து செல்லப்படுகின்றது. இதன் காரணமாக தாவரங்கள் சிறப்பாக வளர முடியாத நிலை உருவாகின்றது. குறிப்பாக ஈரான் நாட்டில் 94%  பாதிப்பும், பாகிஸ்தானில் 61% பாதிப்பும், இலங்கையில் 44% பாதிப்பும் நேபாளத்தில் 26% பாதிப்பும் காணப்படுகின்றது.

மண்ணரிப்பினால் ஏற்படும் பாதிப்புக்கள்

மேல் மண் படை இழக்கப்படல்- மண்ணரிப்பு துரிதமாக நடைபெறுவதனால் மண்ணில் உள்ள மேல் மண் படையானது அடித்து செல்லப்படுகின்றது. இதன் காரணமாக மண் வளம் குன்றுகின்றது. பிரேசில் நாட்டில் ஆண்டுதோறும் 55 மில்லியன் தொன் மேல் மண் படை அழிக்கப்படுகின்றது. உலகளாவிய ரீதியில் ஆண்டுதோறும் 25000 மில்லியன் தொன் மேல் மண் படை பாதிக்கப்படுகின்றது.

மண்ணின் சேதன பொருட்களின் அளவு குறைவடைதல்- மண்ணரிப்பு காரணமாக மேல்மண் படை தரம் இழக்கப்படுவதோடு மட்டுமில்லாமல் நீரோடு அல்லது காற்றோடு அடித்து செல்லப்படுகின்றது. இதன் காரணமாக மண்ணில் உள்ள சேதன ககுருக்களின் அளவு குறைந்து காலப்போக்கில் மண் வளம் குன்றும்.

மண்ணரிப்பினால் ஏற்படும் பாதிப்புக்கள்

நீர் தேக்கங்களில் நீரின் கனவளவு குறைவடைதல்- ஆற்றுப்படுக்கைகளில் அதிகளவிலான மண்ணரிப்பு நிகழ்கின்றது. இதன் காரணமாக மண் ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு நீரின் மூலம் மண் அரித்து செல்லப்படுகின்றது. இதனால் மன்னனின் அளவு குறைவதோடு நீர் தேக்கங்களின் கனவளவும் குறைவடைவதனை அவதானிக்கலாம்.

தரிசு நிலங்கள் உருவாகுதல்- மண்ணரிப்பு ஏற்படுகின்ற பகுதியில் காற்றோடு அல்லது நீரோடு மேல் மண் படை அரித்து செல்லப்படுகின்றது. இதன் காரணமாக மண்ணில் உள்ள சேதன கூறுகள் குறைவடைந்து செல்கின்றது. இதன் காரணமாக மண் வளம் குன்றியதாக மாறுகின்றது. இது காலப்போக்கில் தரிசு நிலங்களாக மாறுவதனை காண்கின்றது.

Saturday, March 6, 2021

மண்ணரிப்பினை தூண்டும் காரணிகள்

 கடும்மழை வீழ்ச்சிப்போக்கு- ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் அதிகளவிலான மழை பொழிகின்ற சந்தர்ப்பத்தில் அதன் பருமன் நிலத்தில் விழுகின்றபோது மண்ணானது நீரோடு அடித்து செல்லப்படும். இதன் காரணமாக மண்ணரிப்பு ஏற்படுகின்றது. குறிப்பாக இந்த மண்ணரிப்பானது பங்களாதேஷ், கலிபோர்னியா, சீனா, மடகஸ்கார் ஆகிய பகுதிகளில் அதிகளவாக இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வெள்ளப்பெருக்கு- ஒரு பிரதேசத்தில் உள்ள நதி நீரின் கொள்வனவு அதிகரிக்கும் சந்தர்ப்பத்தில் அந்த நீரானது அருகில் உள்ள மண்ணினையும், சேர்த்து எடுத்து கொண்டு செல்கின்றது. இதனால் மண்ணரிப்பு ஏற்படுகின்றது. குறிப்பாக சீனாவில் கொங்கொங் நதியானது 1600 மில்லியன் தொன் மண்ணினை மஞ்சள் கடலுடன் எடுத்து செல்கின்றது. இதன் காரணமாக 10 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதுதவிர அமெரிக்காவில் மிசூரி மிசிசிப்பி நதியினால் வருடாவருடம் 448 தொன் பரல் கடலோடு எடுத்து செல்லப்படுகின்றது.

மண்ணரிப்பினை தூண்டும் காரணிகள்

கடலலையின் செயற்பாடு- கடற்கரையோரத்தில் அலைகளின் தொழிற்பாடு காரணமாக தின்னல் செயற்பாடு அதிகரிக்கும் சந்தர்ப்பத்தில் கரையோரத்தில் உள்ள மண் அரித்தல் நிலைக்கு உட்படும். குறிப்பாக இலங்கையில் தென்பகுதியில் அதிகளவிலான அரித்தல் செயற்பாடுகள் நடைபெறுகின்றன. அத்துடன் 665 சதுரகிலோமீட்டர் கரையோரப்பகுதி பாதிப்படைந்துள்ளது.

காற்று- தாவரப்போர்வைகள் குறைவாக உள்ள பகுதிகளிலும் காற்றின் தீவிரத்தன்மை அதிகமாக உள்ள பகுதியிலும் காற்றின் அரித்தல் செயற்பாடுகள் காரணமாக மண்ணானது ஒரு இடத்தில இருந்து இன்னோர் இடத்துக்கு எடுத்து செல்லப்படும். இதன் காரணமாக அந்த பகுதிகளில் அதிகளவு மண்ணரிப்பு நிகழ்கின்றது. குறிப்பாக கோபி, சகாரா, அட்டகாமா, அரிசோனா, பற்றகோனியா ஆகிய பாலைவன பகுதிகளில் மண்ணரிப்பு அதிகமாக நிகழ்கின்றது.

மண்ணரிப்பினை தூண்டும் காரணிகள்

காடழிப்பு- அதிகரித்த சனத்தொகைக்கு ஏற்ப குடியிருப்புக்களை அமைக்கும் பொருட்டு காடழிப்பு துரிதமாக இடம்பெறுகின்றது. இதனால் மண்ணின் பிடிமானத்தன்மை குறைகின்றது. இவ்வாறு தாவரப்போர்வைகள் இல்லாது போவதனால் மண்ணரிப்பு துரிதகதியில் நடைபெறுகின்றது. 2008ம் ஆண்டுகளில்  அமேசான் காடுகள் 8%  அழிக்கப்பட்டுள்ளன. இதனால் தென்னமெரிக்க நாடுகளான பிரேசில் ஆர்ஜென்டினா ஆகிய பகுதிகளில் மண்ணரிப்பு ஏற்படுகின்றது. இதுமட்டுமில்லாது இந்தியாவிலும்  வருடாவருடம்  1.5 தொன் காடுகள் அழிக்கப்படுகின்றன. 

உயர்பிரதேசங்களில் கட்டிடங்களை அமைத்தல்- மலைப்பாங்கான பகுதிகளில் இன்று மக்களின் தோட்ட குடியிருப்புக்கள் அமைக்கப்படுகின்றன. இதன்போது தாவரப்போர்வைகள் வெட்டியகற்றப்படுகின்றது. இதன்காரணமாக சாய்வான பகுதிகளில் மண்ணரிப்பு ஏற்படுகின்றது. இதனை இலங்கையின் மலைநாட்டு பகுதி, இந்தியாவின் மலைப்பகுதிகள் ஆகியவற்றில் அவதானிக்கலாம். 

Friday, March 5, 2021

உலக வங்கி

 உலக வங்கி என்பது வளர்ந்து வரும் நாடுகளுக்கு முதலீட்டு திட்டங்கள் மற்றும் கடன் வசதிகளினை பெற்றுக்கொடுக்கின்ற  நிறுவனம்  ஆகும். உலக வங்கியின் நோக்கம் உலகின் வறுமையினை குறைப்பதாகும். உலக வங்கி ஐந்து பன்னாட்டு நிறுவனங்களை உள்ளடக்கிய உலக வங்கி குழுவின் முதன்மை நிறுவனம் ஆகும். இதில் 189 நாடுகள் அங்கத்துவ நாடுகளாக காணப்படுகின்றன. 

உலக வங்கியின் அமைவிடம் அமெரிக்காவின் வொஷிங்டொன் நகரில் அமைந்துள்ளது. இதன் தலைவர் ஜிங் ஜோம் ஜிம் ஆவார். உலக வங்கி 1944ம் ஆண்டு பிரிட்டன் வூட்ஸ் மாநாட்டில் சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட மூன்று நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கப்பட்டது. உலக வங்கியின் பாரம்பரிய தலைவர் ஒரு அமெரிக்கர் ஆவார். 

உலக வங்கியின் இன்றைய தலைவராக டேவிட் மால்பஸ் காணப்படுகின்றார். உலக வங்கியினை பொறுத்தவரை உலகில் இருக்கின்ற நாடுகள் ஆபத்தில் மற்றும் பண நெருக்கடி, யுத்தம், இயற்கை அனர்த்தம், பொருளாதார சிக்கலில் இருக்கின்றபோது தங்களால் இயன்ற உதவிகளினை மேற்கொள்ளும்.

உலக வங்கியின் இரண்டு பிரதான குறிக்கோள்கள் காணப்படுகின்றது. அவையாவன 2030ம் ஆண்டுக்குள் உலக வறுமையினை 3 சதவீதமாக குறைத்தல், மற்றும் உலகில் 40 வீதமான வறிய நாடுகள் காணப்படுகின்றன. அவற்றின் வருமானத்தினை உயர்த்துதல் போன்றனவாகும்.



Thursday, March 4, 2021

ஜிமெயில் என்றால் என்ன?

 மின்னஞ்சல் என்பது மின்னணு தொடர்பு சாதனங்கள் மூலம் செய்திகளை எழுதுதல், அனுப்புதல், மற்றும் பெறுதல் போன்றவற்றினை செய்கின்ற முறையாக காணப்படுகின்றது. சாதாரணமாக அஞ்சல்களை அனுப்பும்போது யாரிடம் இருந்து யாருக்கு அனுப்புவது என்ற விடயம் இருக்கும். அதுபோல மின்னஞ்சல் பெறுபவரின் முகவரியும் இதற்கு தேவை. ஆனால் இந்த முகவரி நாமாக உருவாக்கிய முகவரி ஆகும். 

ஜிமெயில் என்றால் என்ன?

ஆரம்பத்தில் அமெரிக்கத் தகவல் இடமாற்ற தரக்குறி முறையில் அமைந்திருந்த மின்னஞ்சல்கள் பின்னர் காலப்போக்கில் உலகின் பெரும்பாலான மொழிகளை ஆதரிக்கும் யுனிக்கோட் முறையை கொண்டிருந்தது. உலகம் முழுவதும் ஒரு நாளைக்கு 6 கோடி மின்னஞ்சல்கள் பரிமாறப்படுகின்றன. அவற்றில் 97 சதவீதமானவை விளம்பரங்கள்  மற்றும் தேவையற்ற மின்னஞ்சல்கள் ஆகும்.

இன்றைய இணைய உலகில் பல நிறுவனங்கள் இலவசமாக மின்னஞ்சல்களை உருவாக்கியுள்ளது. இதில் முதன்மை நிறுவனமாக கூகுள் காணப்படுகின்றது. இந்த இணைய மின்னஞ்சல் முகவரியை ஆரம்பிக்க ஒரு பெயரினை வைத்து நீங்கள் ஆரம்பிக்கலாம். அத்துடன் இதற்கு நீங்கள் கடவுச்சொல்லை வைத்துக்கொள்ள வேண்டும். 

ஜிமெயில் என்றால் என்ன?

இந்த ஜிமெயில் மூலம் பல்வேறுபட்ட தரவுகள் மற்றும் தகவல்களை பெற்றுக்கொள்ளலாம். குறிப்பாக கல்வி தொடர்பான விடயங்கள், வீடியோக்கள், குறுஞ்செய்திகள், அவசர கடிதங்கள் போன்றவற்றினை அனுப்பவோ பார்க்கவோ முடியும். அனைத்துவிதமான கணக்குமுறைகளை பெற்றுக்கொள்ள மற்றும் அனுப்பவும் முடியும். இதன் காரணமாக மின்னஞ்சல் சர்வதேச அளவில் முக்கியம் பெறுகின்றது. 

ஜிமெயில் முகவரியினை எந்த காரணத்துக்காகவும் மாற்ற முடியாது. ஆனால் அதன் கடவு சொல்லினை நாங்கள் மாற்ற முடியும். எமது செய்திகளின் பாதுகாப்பு கருதி இந்த கடவு சொல்லினை நாம் மாற்றியமைக்கலாம். வேறு யாரும் எமது கடவுச்சொல்லினை அல்லது ஜிமெயில் மூலம் உருவாக்கிய  சமூகவலை தளங்களை பார்வையிட நேரிட்டால் எமக்கு அது செய்தியாக உடனுக்குடன் வரும். இதன் மூலம்  நாங்கள் எமது பாதுகாப்பினை தக்கவைத்துக்கொள்ள முடியும். 


Wednesday, March 3, 2021

மின்வணிகம் என்றால் என்ன? - (E-Commerce)

 மின்னணு வர்த்தகம்  தொழில் புரட்சிக்கு பின்னர் அனைத்து தொழில்சார் நடவடிக்கைகளும் மின்னணு மூலம் நிறைவேற்றப்பட தொடங்கியது. தொழில்நுட்ப புரட்சியின் விளை இரண்டு முக்கிய காரணிகளாக கணனி பொறியும் இணையமும் ஆகும். மின் வணிகம் என்பது இரண்டு நிறுவனங்களுக்கு இடையே அல்லது வணிக நிறுவனத்துக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே நடைபெறும். இரண்டு வாடிக்கையார்களுக்கு இடையில் கொடுக்கல் வாங்கல் நடைபெறும். இதுதவிர கடன் அட்டை மூலம் பொருட்களை விற்க வாங்க முடியும். 

கடந்த சில வருடங்களாக இந்த மின்னணு விற்பனை முக்கியம் பெற்ற ஒன்றாக காணப்படுகின்றது. ஆடம்பர பொருட்களில் இருந்து அத்தியாவசிய பொருட்கள் வரை இந்த மின்னணு மூலம் விற்க கூடியதாக இருக்கும். இருந்த இடத்தில் இருந்து கொண்டு நமக்கும் எங்களை சார்ந்தவர்களுக்கும் எதையுமே கொண்டு சேர்க்க கூடிய அளவுக்கு மின்னணு வர்த்தகம் முக்கியம் பெற்ற ஒன்றாக மாறி விட்டது.

மின்வணிகம்

வாடிக்கையாளர்களின் நேரம் போதாமை, அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல், பணப்பரிமாற்றத்தின் அடுத்த கட்ட வளர்ச்சி, போன்ற காரணங்களால் மின்வணிகத்தின் வளர்ச்சி சிறப்பாக காணப்படுகின்றது. மக்களுக்கு எந்த பொருட்கள் தேவைப்படுகின்றதோ அந்த பொருட்களை மின்னணு வர்த்தகத்தின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

மின் வர்த்தகத்தினை பொறுத்தவரை கொள்வனவாளர்கள் சந்தையை உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை. சந்தை வாய்ப்பினை கொண்டிராத பொருட்களை கூட சந்தைக்கு கொண்டு போய் சேர்க்கும் வல்லமையினை இது கொண்டிருக்கின்றது. இதன் காரணமாக இன்று உலகளாவிய ரீதியில் மின் வர்த்தகம் முக்கியம் பெறுகின்றது.

மின்வணிகம்

மின் வணிகத்தில் தனியே கொள்வனவாளர்கள் மாத்திரமே சந்தையை உருவாக்குபவர்களாக இருப்பதில்லை. மாறாக முதலீட்டு வருமானத்தின் மதிப்பீட்டினை அடிப்படையாக கொண்ட எந்த ஒரு பொருட்கள் , சேவைகளும் வணிக வாய்ப்பினை உருவாக்குவதாக அமையும். 


நாசா படைத்த புதிய சாதனை

 கெப்லர் விண்வெளி தொலைநோக்கியொன்றின் மூலம் நாசா 7 புதிய கிரங்கங்களை கண்டுபிடித்த்துள்ளது. சூரியகுடும்பத்தில் உள்ள எந்த கிரகத்தை எடுத்தாலும் ...